செய்திகள் :

சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

post image

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், `கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எங்கள் பகுதியில் வசித்து வந்த வெண்ணிலா என்பவர் மீது புகார் ஒன்றை அளித்திருந்தோம். வெண்ணிலா‌, தனது ஒரே மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

நகையை மீட்டுத்தர புகார்

அந்த வழக்கிலிருந்து தனது மகனை மீட்க வேண்டும் என எங்களிடம் பண உதவி கேட்டார். வெண்ணிலா நன்கு தெரிந்தவர் என்பதால், எங்களிடம் இருந்த நகையை கொடுத்து உதவினோம். மாரியம்மன் கோவிலில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நாங்கள் கொடுத்த சுமார் 30 சவரன் நகையை அடகு வைத்து பணம் எடுத்து கொண்டார். சில தினங்களில் நகையை கொடுத்து விடுவதாக சொன்னதால் நாங்களும் நம்பி கொடுத்தோம்.

இந்நிலையில், வெண்ணிலா அடகு வைத்த பணத்துடன் பூண்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் தலைமறைவாகி விட்டார். அவர்களை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இருவர் குறித்த தகவலும் இல்லை. இப்படியான சூழலில் தான் நாங்கள் வெண்ணிலா குறித்து புகார் அளித்திருந்தோம். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு கோயமுத்தூர் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக மோகன்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் வெண்ணிலாவுடன் தலைமறைவான மோகன்ராஜ் என்பதும், இருவரும் திருமணம் மீறிய உறவில் வசித்து வந்ததும் சூலூர் காவல்துறையினர் மூலம் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தற்போது மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு விட்டார். எனவே கடந்த ஆண்டு கொடுத்த புகார் மனு மற்றும் இன்று வழங்கிய புகாரின் அடிப்படையில் கோவை சூலூரில் பதுங்கியுள்ள வெண்ணிலாவிடம் இருந்து எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும். மேலும் எங்களை ஏமாற்றிய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்... மேலும் பார்க்க

கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியி... மேலும் பார்க்க

ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து கணவரைக் கொன்ற மனைவி

கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தீப், கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லேசான விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பெரிய அளவில் காய... மேலும் பார்க்க

சென்னை: விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில், சரக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படு... மேலும் பார்க்க

ஈரோடு: "கிட்னியை விற்று கடனைக் கட்டு" - எஸ்.பி அலுவலகத்தில் கதறிய பெண்; பாஜக நிர்வாகி கைது

ஈரோடு மாவட்டம் கொங்கு ஸ்கூல் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சுகுணா. அசோகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் 2024-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வட்டிக்கு பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க