இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்...
செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை இனி மரிய வில்சன் வசம்! - புதிய அமைச்சர்களுக்கான முழு இலாகா விவரம்
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் தவெக தலைவர் விஜய். கடந்த 10-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், மொத்தம் 32 அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர். இந்த நிலையில், பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையம் எம்.எல்.ஏ செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக அவரிடம் இருந்த நிதுத்துறை இன்று பதவியேற்ற மரிய வில்சனுக்கு மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த்துக்கு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், வறுமை ஒழிப்புத் திட்டம், ஊரகக் கடனுடைமை மற்றும் நீர்ப்பாசனம், சிறு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.





















