அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் ...
கடன் பெற்றவர்களுக்கு 'மரியாதை': கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு RBI வழிகாட்டுதல்கள்! | 15 Points
கடன் வாங்கியவர்களுக்கும், கடன் வாங்க உள்ளவர்களுக்கு உள்ள பெரும் பயமே 'கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்டிவிடுவார்களோ' என்பது தான்.
இங்கே பலரால் சூழல்களால் தான் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போய்விடுகிறது.
இதனால், கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகள் வீட்டிற்கு வந்து தாறுமாறாக திட்டுவது தான் அனைவருக்கும் பயம்.
இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, கடன் வசூல் செய்வதற்கும், கடன் வசூல் செய்யும் ஏஜென்ட்டுகளுக்கும் திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
அவை...
1. சரியில்லாத முறையில் கடன் வசூலிக்கப்படுவதால், கடன் பெற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு வங்கிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
2. கடனை வசூலிக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்டுகளிடமும் கட்டாயம் IIBF சான்றிதழ் இருக்க வேண்டும்.
3. வங்கிகள் தங்களுடைய வலைதளம் மற்றும் ஆப்களில் தங்களது கடன் வசூலிக்கும் ஏஜென்சிகளின் பெயரை வெளியிட வேண்டும்.
4. ஏஜென்ட்டுகள் முதல்முறை கடன் பெற்றவர்களை சந்திக்கச் செல்லும் போது, அது சம்பந்தமான வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கு 'நோட்டிபிக்கேஷன்' தர வேண்டும்.
5. ஏஜென்ட்டுகளை மாற்றினாலோ, பணி நீக்கம் செய்தாலோ, அது குறித்து கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.
6. வங்கிகள் ஏஜென்ட்டுகளின் போன் கால்களை ரெக்கார்ட் செய்ய வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு அந்த போன் கால் ரெக்கார்டிங்கை வங்கிகள் மெயின்டெயின் செய்ய வேண்டும்.
7. கடன்களைத் திரும்ப வசூலித்தால் ஏஜென்ட்டுகளுக்கு இன்சென்டிவ் வழங்கப்படுவது இனி ரத்து.
8. கடன் பெற்றவர்களின் பொருள்கள் அல்லது சொத்துகளை பறிமுதல் செய்யப்படுவதற்கான பாதுகாப்பான நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
9. கடன் பெற்று மொபைல் போன், டேப்லெட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவை வாங்கப்பட்டிருந்து, அதன் தவணைகளை 90 நாள்களுக்கு மேல் கட்டவில்லை என்றால் தான், அந்த சாதனத்தை வங்கிகள் 'disable' செய்ய வேண்டும்.
10. ஒரு சாதனத்தை Disable செய்வதற்கு முன்பு, 21 நாள்கள் + ஏழு நாள்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
11. ஒரு சாதனம் தவறாக பிளாக் செய்யப்பட்டால், கடன் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வங்கிகள் ரூ.250 வழங்க வேண்டும்.
12. ஏஜென்ட்டுகள் கடன் வசூலிக்க செல்லும் போது ஐ.டி மற்றும் அங்கீகார கடிதத்தை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
13. ஏஜென்ட்டுகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வசூலிப்பதற்கான போன் கால்களைச் செய்ய வேண்டும்.
14. வசூல் சம்பந்தமான புகார்களுக்கு, பிரத்யேக குறைதீர்ப்புப் பிரிவை வங்கிகள் அமைக்க வேண்டும்.
15. கடன் பெற்றவர்களின் வீடுகளில் துக்க நிகழ்வு அல்லது திருமண நிகழ்வு நடக்கும் போது, ஏஜென்ட்டுகள் கடன் பெற்றவர்களை அணுகக் கூடாது.


















