செய்திகள் :

சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?

post image

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

காரணம் என்ன?

டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையின் வடக்குத் திசையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மழை
மழை

அடுத்த 24 மணி நேரத்தில், இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு அருகிலும் இணையாகவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மதியம் மற்றும் மாலை நேரத்தில் டிட்வா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு முறையே 70 கிலோ மீட்டர் தொலைவிலும், 30 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கலாம்.

இது வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அப்டேட்.

சென்னையில் மழை...

தற்போது சென்னை வானிலை மையம் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கியுள்ளது. இங்கே 115.6 - 204.4 மி.மீ அளவில் மழை பெய்யலாம்.

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுத்துள்ளது. இங்கே 64.5 - 115.5 மி.மீ அளவில் மழை பெய்யலாம்.

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க

`வலுவிழந்த' காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை' அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?

சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை.இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ப... மேலும் பார்க்க