செய்திகள் :

சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!

post image

சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 12.12.2025-ம் தேதி அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஆபாச மெசேஜ்கள், ஆபாச வீடியோக்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பிங் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சூழலில் ஆபாச வீடியோக்களை அனுப்பியவர், `உன்னுடைய நிர்வாண வீடியோவை எனக்கு அனுப்பு, இல்லையெனில் இந்த மார்பிங் வீடியோவை உனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து விடுவேன்' என மிரட்டி மற்றொரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதற்கும் அந்தப் பெண் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

கைது
கைது

தொடர்ந்து முகம் தெரியாத ஒருவரால் மனரீதியாக பாதிக்கப்பட்ட இளம்பெண், மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஐ.பி., அட்ரஸ் குறித்த விவரங்களையும் சைபர் போலீஸார் சேகரித்தனர். அப்போது பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியது திருவள்ளூர் மாவட்டம், காரம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் (23) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, புகார் கொடுத்த இளம்பெண்ணின் உறவினர் ஒருவரை சேகர் காதலித்து வந்திருக்கிறார். இந்த காதல் விவகாரம் புகார் கொடுத்த இளம்பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது. அதனால் தங்களின் காதல் விவகாரத்தை குடும்பத்தினரிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில் இளம்பெண்ணை மிரட்ட சேகர் இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு சேகரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க