செய்திகள் :

சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!

post image

சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 12.12.2025-ம் தேதி அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஆபாச மெசேஜ்கள், ஆபாச வீடியோக்கள், சம்பந்தப்பட்ட பெண்ணின் மார்பிங் வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சூழலில் ஆபாச வீடியோக்களை அனுப்பியவர், `உன்னுடைய நிர்வாண வீடியோவை எனக்கு அனுப்பு, இல்லையெனில் இந்த மார்பிங் வீடியோவை உனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து விடுவேன்' என மிரட்டி மற்றொரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதற்கும் அந்தப் பெண் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

கைது
கைது

தொடர்ந்து முகம் தெரியாத ஒருவரால் மனரீதியாக பாதிக்கப்பட்ட இளம்பெண், மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து ஐ.பி., அட்ரஸ் குறித்த விவரங்களையும் சைபர் போலீஸார் சேகரித்தனர். அப்போது பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியது திருவள்ளூர் மாவட்டம், காரம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் (23) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, புகார் கொடுத்த இளம்பெண்ணின் உறவினர் ஒருவரை சேகர் காதலித்து வந்திருக்கிறார். இந்த காதல் விவகாரம் புகார் கொடுத்த இளம்பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது. அதனால் தங்களின் காதல் விவகாரத்தை குடும்பத்தினரிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில் இளம்பெண்ணை மிரட்ட சேகர் இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு சேகரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க