செய்திகள் :

சென்னை: வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகளை நூதன முறையில் திருடிய உதவி மேலாளர் - சிக்கியது எப்படி?

post image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அயனாவரம் கிளையில் மேலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர், 13.8.2026-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அயனாவரம் கிளையின் உதவி மேலாளராக பணியாற்றிய பொட்னூரு முரளி கிருஷ்ணா என்பவர் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை திருடிச் சென்று அதற்கு பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்து மோசடி செய்திருக்கிறார். வங்கியில் திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனையைத் தொடங்கினர்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

விசாரணையில் அயனாவரம் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 2,179 கிராம் தங்க நகைகளுக்குப் பதில் போலியான நகைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக உதவி மேலாளர் பொட்னூரு முரளிகிருஷ்ணா என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், வங்கியில் அடகு வைத்த நகைகளை வைத்திருக்கும் லாக்கரின் சாவி தன்னிடம் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் தங்க நகைகளைத் திருடி, அதை வேறு இடங்களில் அடகு வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அதன்மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டிலும் (Online Game) சொந்த செலவுக்கும் பயன்படுத்தி விட்டதாகவும் போலீஸாரிடம் உதவி மேலாளர் கூறியிருக்கிறார். இதையடுத்து உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணாவை (34) போலீஸார் கைதுசெய்தனர். இவர், சென்னை புரசைவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம். விசாரணைக்குப் பிறகு உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து வங்கியிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சட்டையைப் பிடித்து அறைந்த ஆசிரியை; சுருண்டு விழுந்து இறந்த சிறுவன் - ஆந்திரா பள்ளியில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' என்ற தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியைத் தாக்கியதில் 6 வயதான பிரணாய் தேஜா என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உ... மேலும் பார்க்க

`ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன்' - சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார். கணவ... மேலும் பார்க்க

நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!

நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த ... மேலும் பார்க்க

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த ... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ் சாமி உயிரிழப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான டீ எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017... மேலும் பார்க்க

சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நவீன் (41). இவரின் மகள் க்ஷிபிஜா (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வக... மேலும் பார்க்க