செய்திகள் :

சென்னை: வாட்ஸ்அப் காலில் ஆபாச செயல்; ஆதாரத்துடன் புகாரளித்த பெண்ணால் சிக்கிய ஐடி ஊழியர்

post image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி பெண் குழந்தையுடன் சென்னை, எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

03.05.2026-ம் தேதி மாலை அந்தப் பெண் வீட்டிலிருந்தபோது, அவரின் செல்போனுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வாட்சப் வீடியோ கால் அழைப்பு வந்திருக்கிறது. தெரியாத நம்பர் என்பதால் அந்தப் பெண், அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் தொடர்ந்து வீடியோ கால் வந்ததால், மேற்படி பெண் செல்போனை எடுத்தபோது, எதிர்முனையில் ஒரு ஆண் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

அதைப்பார்த்த அந்தப்பெண் அதிர்ச்சியடைந்ததோடு செல்போன் இணைப்பைத் துண்டித்திருக்கிறார். பின்னர் சில மணி நேரம் கழித்து அதே செல்போன் எண்ணில் இருந்து மீண்டும் வீடியோ கால் அழைப்பு வந்திருக்கிறது.

மணிகண்டன்
மணிகண்டன்

உடனே உஷாரான அந்தப் பெண் அழைப்பை ஏற்றபோது அதே நபர் ஆபாச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். உடனே இன்னொரு செல்போன் மூலம் அந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்திருக்கிறார் அந்தப் பெண்.

பின்னர், எழும்பூர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் அந்தப் பெண் புகார் கொடுத்ததும் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு எழும்பூர் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர்தான் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்ததோடு அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன், சென்னை மந்தைவெளியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் எழும்பூர் பகுதியில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. மணிகண்டனின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர்: கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்யப்பட்ட வி.சி.க முன்னாள் நிர்வாகி - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்தவர். இவர், குரண்டி க... மேலும் பார்க்க

சென்னை: `அவசரத் தேவை' எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). இவர், சென்னை, பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 04.05.2026-ம் தேதி அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி பகுதியில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரெளடி மரிய அந்தோணி யார்? - பகீர் பின்னணி

தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோ... மேலும் பார்க்க

சென்னை: வீட்டில் தனியாக இருந்த நர்ஸுக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் கைது; என்ன நடந்தது?

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவர், தண்டையார்பேட்டை பகுதியில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவரின் ... மேலும் பார்க்க

TVK: பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.68,000 பறிப்பு; தவெக நிர்வாகி மீது வழக்கு; ஒருவர் கைது

கும்பகோணம், ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63). பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், அவரது மகன் பாலசுப்பிரமணியன்(38), க... மேலும் பார்க்க

சென்னை: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; தானே பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளம் பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின... மேலும் பார்க்க