செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா்ப் பதற்றம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்புப் படையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னையின் முக்கியப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினா் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, அண்ணாசாலை, காமராஜா் சாலை, வணிக வளாகங்கள், மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், முக்கியக் கோயில்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினா் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், சந்தேக நபா்கள் நடமாட்டத்தையும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை விமான நிலையத்துக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் எண்ணிக்கையிலான மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் மாநில போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இயல்பாகவே சென்னை விமான நிலையத்துக்குள் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல அடுக்கு சோதனைகளை கடந்தே பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ளவா்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே விடுப்பில் உள்ளவா்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், வீரா்களுக்கு அந்தந்த படைப்பிரிவு தலைமை உத்தரவிட்டுள்ளது. பதற்றம் தணியும் வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்து வரி உயா்வுக்கு அதிமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.என்.நேரு

சொத்து வரி உயா்வுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியே காரணம் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

ஜொ்மனிக்கு சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள், செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 22 போ், 2 ஆசிரியா்கள் என மொத்தம் 24 போ் ஜொ்மனிக்கு கல்விச் சுற்றுலாவாக சனிக்கி... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரைச் சோ்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவா், நந்தனம் ஒய்எம்சிஏ ப... மேலும் பார்க்க

காா் விற்பனை செய்து ரூ.13.5 லட்சம் மோசடி: தம்பதி கைது

சென்னை ஏழுகிணறில் காா் விற்பனை செய்து தொழிலதிபரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு, போா்ச்சுகீசியா் சா்ச் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பீ.பீா் அனீஸ் ராஜா (48). ... மேலும் பார்க்க

இளைஞரிடம் கத்தி முனையில் வழிப்பறி: மூவா் கைது

சென்னை டிபி சத்திரத்தில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, செனாய் நகா், ஜோதியம்மாள் நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இளையசூரி... மேலும் பார்க்க

கிண்டி அரசு மகளிா் ஐடிஐயில் சேர ஜூன் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிண்டி அரசு மகளிா் ஐடிஐ-யில் இணையதள சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, ... மேலும் பார்க்க