செய்திகள் :

அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!

post image

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இயங்கி வரும் புனித தாமஸ் பள்ளியின் 50- வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நபர்களை சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிர்வாகம் தரப்பில் அழைத்துள்ளனர்.‌ மேற்கூரையற்ற திறந்தவெளி மேடை என்பதால் நேற்று பெய்த மழையின் போது அனைவரும் நனையும் நிலை ஏற்பட்டது.

ஆ. ராசா

மழையில் நனைந்தபடியே ராகுல் காந்தியும் உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க- வின் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் அ.தி.மு. க-வைச் சேர்ந்த கூடலூர் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் ஆகிய இருவரும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்துள்ளனர். மழை அதிகரித்த நேரத்தில் தான் வைத்திருந்த போர்வையை அருகில் இருந்த எம்.எல்.ஏ பொன். ஜெயசீலனுடன் பகிர்ந்துள்ளார். எதிரெதிர் கட்சியில் பயணிக்கும் இருவரும் மழைக்கு ஒரே போர்வையை பகிர்ந்து கொண்ட செயல் கவனத்தை ஈர்த்து வருகிறது.

'அன்பு, கருணை, பரிவு' - மாணவர்கள் மத்தியில் நெகிழ்ந்த ராகுல் காந்தி! - முழு உரை

நீலகிரியின் கூடலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி இந்திய அரசி... மேலும் பார்க்க

பொங்கலிட்ட மோடி; ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சி; பங்கேற்ற பராசக்தி படக்குழு! - டெல்லி பொங்கல் விழா!

டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா மேலும் பார்க்க

பராசக்தி: `இந்தி திணிப்பின்போது இருந்த காங்கிரஸ் வேறு, இப்ப இருக்கும் காங்கிரஸ் வேறு"- ரகுபதி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்... மேலும் பார்க்க

குடும்பத்தைவிட்டு பிரிந்த தேஜ் பிரதாப் தந்தை லாலு, சகோதரன் தேஜஸ்வியுடன் சந்திப்பு! - என்ன காரணம்?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது சகோதரனுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றார். அதோடு தனிக்கட்சி ஆரம்ப... மேலும் பார்க்க