செய்திகள் :

சென்னை: வெளுத்து வாங்கிய கனமழை; நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

post image

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தூரத்தில் நீண்டநேரம் நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் குறிப்பாக சென்னையில் கடந்த 10 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. அடுத்த 24 மணி நேரம் இந்த நிலைத் தொடரும் எனக் கூறப்படுகிறது.

இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் மழை அதீதமாக இருக்கலாம் என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் கணித்திருக்கின்றனர்.

சென்னை மழை
சென்னை மழை

2015ம் ஆண்டு போல பெருவெள்ளம் வரும் சூழல் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (டிச. 1) வழக்கம்போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai: வெளுத்து வாங்கும் மழை

சென்னையில் அதிகபட்சமாக இன்று (01.12.2025) எண்ணூரில் 19 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல மணலி வார்டு 18ல் 16 செ.மீ மழையும், பாரிஸில் 15 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸில் 14 செ.மீ அளவிற்கு மழையும், விம்கோ நகரில் 13 செ.மீ அளவிற்கு மிக கனமழையும், வடபழனியில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

சென்னையில் கனமழை
சென்னையில் கனமழை

பேசின் பிரிட்ஜ், சாலிகிராமம் மற்றும் மேடவாக்கத்தில் 12 செ.மீ அளவிற்கு மழை பொழிவும், காசிமேட்டில் 11 செ.மீ அளவிற்கு மழையும், நுங்கம்பாக்கம் மற்றும் சைதாபேட்டையில் 10.5 செ.மீ அளவிற்கு மழைப்பொழிவும், தண்டையார்பேட்டையில் 10.4 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியிருக்கிறது.

நெற்குன்றம், புழல், அமைந்தகரை மற்றும் வளசரவாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. பிற இடங்களில் 10 செ.மீ-க்கும் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. 

தொடர்ந்து சென்னையில் மணிக்கு 5 முதல் 15 மிமீ மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரணம் என்ன? டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கர... மேலும் பார்க்க

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்

வங்கக் கடலுக்கு தென்மேற்கு திசையிலும், வட தமிழ்நாடு (சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்), புதுச்சேரி கடற்கரைக்கு அருகேயும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது டிட்வா புயலின் மீதமுள்ள பகுதி ஆ... மேலும் பார்க்க

Rain Update: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? Cyclone Ditwah Update

டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். சென்... மேலும் பார்க்க

Ditwah: டிட்வா புயல் எங்கே இருக்கிறது? எப்போது தமிழ்நாட்டிற்கு வருகிறது? |Rain Update | Live News

நாளை (நவம்பர் 30, 2025) தமிழ்நாட்டில் 'Red Alert' எங்கே? தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்... ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம். இந்தப்... மேலும் பார்க்க

Rain alert: டிட்வா புயல்; தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்கள்; எங்கெல்லாம் விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை அந்நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இலங்கையில் ஏற்பட்டிர... மேலும் பார்க்க

Cyclone Ditwah: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! - `டிட்வா' புயல் எப்போது கரையை கடக்கும்?

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் `டிட்வா' (Cyclone Ditwah) புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரிக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தி... மேலும் பார்க்க