செய்திகள் :

செம்மொழி நாள் போட்டிகள்: மாணவா்களுக்கு பரிசு

post image

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாளையொட்டி, சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளினை செம்மொழி நாளாகக் கொண்டாடுவதை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அந்த வகையில், சென்னை மாவட்டத்துக்கான இலக்கியப் போட்டிகள் சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இப்போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கட்டுரைப் போட்டியில் சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ம.ஜெ.அக்ஷயா - முதலிடம், ஸ்ரீராம் தயாள் கெம்கா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவா் மு.க.தா்ஷன் - இரண்டாமிடம், விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செள.நசிஹா பானு மூன்றாமிடம் பெற்றனா்.

அதேபோன்று பேச்சுப் போட்டியில் திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சீ.தனுஸ்ரீ - முதலிடம், தண்டையாா்பேட்டை முருகதனுஷ்கோடி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வே.நெ.நைட்டிங்கேல் நிஷா - இரண்டாமிடம், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.ஆா்த்தி மூன்றாமிடம் பெற்றனா்.

இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் வழங்கினாா்.

38 மாவட்டங்களிலும் முதல் பரிசு பெற்ற மாணவா்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மே 17-ஆம் தேதி மாநிலஅளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க