செய்திகள் :

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

post image

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இணையத்தில் கேலியும், கிண்டலுமாக மாறி இருக்கிறது. சமூக வலைதள பக்கத்தில் தம்பதியினர் திருமணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் புதுமையாக சினிமா பாணியில் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இருவரும் சேறு நிறைந்த தண்ணீரில் கண்களை மூடியபடி மிதந்து கொண்டிருந்தனர்.

தங்களது காதல் முடிவில்லாதது என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் கண்களை மூடிக்கொண்டு தண்ணீரில் மிதந்தபடி போஸ் கொடுத்தாலும், அவர்கள் அதற்காக தேர்ந்தெடுத்த இடம் மிகவும் மோசமாக இருந்ததால் சமூக வலைதளங்களில் அது கேலிப்பொருளாக மாறியுள்ளது.

அந்தத் தம்பதியினர் அழுக்கு நீர் நிறைந்த குளத்தில் படுத்துக் கிடக்க, ஒரு புகைப்படக் குழுவினர் முழங்கால் அளவு சேற்றில் நின்று கொண்டு அவர்களுக்குத் தீவிரமாக போஸ் சொல்லிக் கொடுக்கின்றனர். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது ஒரு ரொமான்டிக் காட்சி போல இல்லை என்றும், ஏதோ ஒரு திரில்லர் படம் அல்லது குற்றப்புலனாய்வுத்துறையின் காட்சி போல இருப்பதாகவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும், ப்ரீ-வெடிங் ஷூட்டிற்காக தம்பதியினர் இவ்வளவு தூரம் செல்வது விசித்திரமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கு படித்துவிட்டு, கடைசியில் திருமணப் புகைப்படக் கலைஞராக மாறினால் இப்படித்தான் நடக்கும் என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து பணத்தை வீணடிக்க வேண்டும்? உங்களுக்குத் தேவையானபடி AI மூலம் எடிட் செய்து கொள்ளலாமே என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த சரியான தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், நவீன ப்ரீ-வெடிங் டிரெண்டுகள் (trends) எந்தளவுக்கு வினோதமாகச் செல்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.

பேஸ்புக்கில் மனைவி வெளியிட்ட சிமென்ட், டிரம் பதிவு; மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவன்- உ.பி அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கடந்த ஆண்டு தனது கணவனை காதலன் துணையோடு கொலைசெய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமென்ட்டால் நிரப்பிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத... மேலும் பார்க்க

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாட... மேலும் பார்க்க

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகி... மேலும் பார்க்க

VanDyke : கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி; மர்மம் நிறைந்த கதைகள்! இந்தியாவில் சிக்கிய அமெரிக்கர் யார்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி உட்பட இரண்டு இடங்களில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதாகவும், இந்தியாவில் உளவு பார்த்ததாகவும் 6 உக்ரைன் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு அமெரிக்காவை சேர்ந... மேலும் பார்க்க

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்.... மேலும் பார்க்க

`உறுதிப்பத்திரம் கொடுத்தால்தான் அனுமதி' - கேதார்நாத் வரும் இந்து அல்லாதவர்களுக்கு புது கட்டுப்பாடு

இந்துக்களின் புனித இடங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் இந்துக்கள் அல்லாத பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி,இந்து அல்லாதவர்கள் பத்ரிநாத் மற்றும... மேலும் பார்க்க