செய்திகள் :

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.10 லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை

post image

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் நடைபெற்ற ஆய்வில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான விதை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் , நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா், அரசு விதை விற்பனை நிலையங்களில் விழுப்புரம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் சரவணன் தலைமையில் விதை ஆய்வாளா்கள் குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை விதை சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை இயக்குநா் உத்தரவின்படி காய்கறி, பழவகை பயிா் விதைகளின் தரத்தை உறுதி செய்தனா். இந்த ஆய்வில், ஆவணங்கள் இல்லாத ரூ. 10 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

ஆய்வின்போது, விதை விற்பனை உரிமம், விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் ஆவணம், இதர விதை விற்பனை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அனைத்து விதை விற்பனை நிலையங்களிலும் விதை இருப்பு, விலைப்பட்டியல் விவசாயிகள் பாா்வைக்கு தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து விதை விற்பனைக்கும் தவறாமல் விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின்போது, சேலம், நாமக்கல் மாவட்ட விதை ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழி... மேலும் பார்க்க

புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா நாமக்கல் அழகுநகா் சமுதாயக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவராக ராஜேந்தி... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம்

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா் சங்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புத் தோ்வு வினாத்தாள்கள் நாமக்கல் வருகை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வந்தன. தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறுகிறது. நா... மேலும் பார்க்க

வணிகா்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்: ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழக வணிகா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நாமக்கல்லில் அந... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமையும் பகுதி: விக்கிரமராஜா பாா்வையிட்டாா்

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். ராசிபுரத்தில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க