செய்திகள் :

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

post image

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயமணியின் மருமகளாக 'திருமதி செல்வம்' சீரியலில் நடித்த நடிகை அபிதாவிடம் நாம் பேசினோம். தற்சமயம் கேரளாவில் இருப்பதால் அவருக்கு ஜெயமணி மறைந்தது குறித்து தெரியாத சூழலில், தகவல் கேள்விப்பட்டதும் அதிச்சியடைந்தவர், சில நிமிடம் ஆசுவாசப்படுத்திக கொண்டு பேசத் தொடங்கினார்.

'ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி கூடப் பேசினார். போனை அட்டென்ட் செய்ததுமே, 'மருமகளே'ங்கிற அவர் குரலைக் கேட்டா அப்படியொரு சந்தோஷம் எனக்கு உண்டாகும்.

'திருமதி செல்வம்' தொடரில் எனக்கு மாமனார் கேரக்டர் பண்ணும் போது அப்படிக் கூப்பிடத் தொடங்கினார். நாளடைவுல என்னைக் கூப்பிடணும்னாலே அந்த வார்த்தையிலதான் கூப்பிடுவார்.

Abitha

'வாய் நிறைய மருமகளே'னு தன்னுடைய சொந்த மருமகளைக் கூட அந்தளவு கூப்பபிட்டிருப்பாரானு தெரியலை.

காமெடி சீன்ல எந்தளவு வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பாரோ அதே அளவு எமோஷனல் காட்சிகளில் மனுஷன் நடிப்புல பின்னிடுவார். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு யாராவது பேசத் தயங்கினா அவங்ககிட்ட வலுக்கட்டாயமாப் போய் வம்பிழுத்துப் பேசுவார்.

நடிக்க வந்த பிறகு கூச்சம், தயக்கமெல்லாம் தூக்கி எறிஞ்சுடணும். விருதெல்லாம் வேண்டாமா'னு ஜாலியாப் பேசியே அவங்களை மிங்கிள் ஆக வச்சிடுவார்.

திருமதி செல்வம் சீரியல்ல நடிச்சு முடிச்ச பிறகும் தொடர்புலயேதான் இருந்தோம். அப்பப்ப பேசுவார். 'கேரளாவுலயே இருந்தன்னா என் மருமகளை நான் பார்க்கணும்னா என்ன செய்யறது? நு கேப்பார். அவசியமில்லாம நடிப்புக்கு பிரேக் விடக்கூடாதுனு அட்வைஸ் பண்ணுவார். கடைசியா ஒரு தடவை அவர் முகத்தைப் பார்க்க முடியாம போனது என்னுடைய துரதிர்ஷ்டம். உடனே எனக்கு தகவல் தெரிஞ்சிருந்தாக் கூட சென்னை கிளம்பி வந்திருப்பேன்.

இனி 'மருமகளே'ன்னு ஒரு போன் கால் சென்னையிலிருந்து வராதுங்கிறதை நினைச்சாலே மனசு பாரமாகுது' என குரல் உடைய முடித்தார் அபிதா.

"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா

சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில்... மேலும் பார்க்க

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு த... மேலும் பார்க்க

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' - எதற்காகத் தெரியுமா?

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே 'பிக்பாஸ் தி காமன் மேன்' அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்... மேலும் பார்க்க

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த... மேலும் பார்க்க

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க