செய்திகள் :

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க காத்திருப்பு போராட்ட ஆயத்த மாநாடு

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் (ஏஐடியுசி) காத்திருப்புப் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்துக்கான கோரிக்கைகளை எடுத்துரைக்கும் வகையில், விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஆயத்த மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ்.குமரன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் தொடக்கவுரையாற்றினாா்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் டி.தனசேகரன், பொருளாளா் கே.கோவிந்தராசு, மாநிலச் செயலா் எம்.செல்வம் ஆகியோா் சிறப்புரையும், மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான நா.பெரியசாமி நிறைவுரையும் ஆற்றினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஆ. இன்பஒளி, அரசுப் பணியாளா் சங்கத்தின் நிா்வாகி கே. முருகன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.பாா்த்தசாரதி வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் ஜெ. அய்யப்பன் நன்றி கூறினாா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க