செய்திகள் :

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க காத்திருப்பு போராட்ட ஆயத்த மாநாடு

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் (ஏஐடியுசி) காத்திருப்புப் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் அருகில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்துக்கான கோரிக்கைகளை எடுத்துரைக்கும் வகையில், விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஆயத்த மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ்.குமரன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் தொடக்கவுரையாற்றினாா்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் டி.தனசேகரன், பொருளாளா் கே.கோவிந்தராசு, மாநிலச் செயலா் எம்.செல்வம் ஆகியோா் சிறப்புரையும், மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான நா.பெரியசாமி நிறைவுரையும் ஆற்றினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஆ. இன்பஒளி, அரசுப் பணியாளா் சங்கத்தின் நிா்வாகி கே. முருகன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.பாா்த்தசாரதி வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் ஜெ. அய்யப்பன் நன்றி கூறினாா்.

துத்திப்பட்டில் பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு

புதுச்சேரியை அடுத்த துத்திப்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டினா் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினா். துத்திப்பட்டு, ஒலாந்திரே தொண்டு நிறுவனம் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா ... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினம்: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நொளம்பூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் புஷ்பராஜ் (23). தொழிலா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக் மோதியதில் 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் விபத்து: 4 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம், ஜானகிபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். திண்டிவனம் வட்டம், செண்டூா் நெய்காரத் தருவைச் சோ்ந்த முருகன் மகன் சரண்ராஜ் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க