செய்திகள் :

``தமிழக அரசில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும் சேலம் அம்பேத்கர் சிலையைத் திறக்கவில்லை" - பா.ரஞ்சித்

post image

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ``நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், "நாம் எதுவுமே செய்யவில்லையா?" என்று இயக்குநர் வெற்றிமாறன் கேட்ட கேள்வி மற்றும் நடிகை ரேவதியின் ஆதங்கம் ஆகியவையே முக்கிய உந்துதலாக அமைந்தது.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

'சிஜேபி' (CJB) அமைப்பும், அதன் போராட்ட வடிவமும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும். தொடக்கத்தில், அம்பேத்கர் படத்தையும் 'ஜெய் பீம்' முழக்கத்தையும் ஏந்திப் போராடிய அந்த இளைஞரைப் பார்க்கும்போது, சமூகத்தின் சாதியப் பார்வைகளால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது.

ஆனால், சாதி, மத எல்லைகளைக் கடந்து இந்திய அளவிலான ஏராளமான இளைஞர்கள் இன்று அந்த அமைப்பின் பின்னால் திரண்டு போராடுவதைப் பார்க்கும்போது பெரும் நம்பிக்கை பிறக்கிறது. வாழ்க்கையில் முதல்முறையாக, இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு நானும் ஒரு 'இந்தியன்' என்ற உணர்வைப் பெறுகிறேன்.

இங்குள்ள கல்வி அமைப்பில் நிலவும் சமத்துவமின்மையை 'ஜெய் பீம்' என்னும் கோட்பாடே கேள்வி கேட்கிறது. இடஒதுக்கீடு மூலமாகத் தலித் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்று உள்ளே வருகிறார்கள் என்று காலம் காலமாகப் போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. ஆனால், நீட் தேர்வில் வெறும் 120 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, பண பலத்தால் பலர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதைக் கண்டு இங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை.

பொருளாதார ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் நீட் தேர்வில் நிலவும் இந்த அநீதியையும் சமத்துவமின்மையையும் புரிந்து கொண்டு இளைஞர்கள் இப்போதுதான் அதற்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளனர்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

நீட் தேர்வை எதிர்க்கும் தமிழ்நாட்டில், அறவழியில் போராடும் மாணவர்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவது தவறான அணுகுமுறையாகும். பாசிச பா.ஜ.க அரசு மாணவர்களை ஒடுக்குவதை எதிர்பார்க்கலாம். ஆனால் நீட்டை எதிர்க்கும் தமிழக அரசு மாணவர்களை அடியாள்களைப் போலக் காவல்துறையை வைத்து தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதேபோல, தமிழக அரசில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும், பழங்குடியின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கோ அல்லது சேலத்தில் 6 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளின் சாதியக் காழ்ப்புணர்ச்சியும், ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆட்சியாளர்கள் செய்யும் சமரசங்களுமே இதற்கு முதன்மைக் காரணம்.

இன்றைய 'ஜெய் பீம்' முழக்கமும், மாணவர்களின் எழுச்சியும் இந்திய அளவில் ஒரு புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ளன.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

எனவே, தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை ஒடுக்காமல், அவர்கள் அறவழியில் போராடுவதற்கு மெரினா போன்ற இடங்களில் பாதுகாப்பான இடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

வெறும் அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், முதல்வரும் அரசும் மாணவர்களோடு களம் கண்டு நின்று போராடி, இந்த அநீதியான நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்தெடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும்" என்றார்.

நீட் தேர்வு: "நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை அவமானப்படுத்த வேண்டாம்" - மோடியைச் சாடிய ராகுல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு (ஜ... மேலும் பார்க்க

"நாய்கள் மனுவை விசாரிக்க நேரம் இருக்கு; ஆனால்.."- மாணவர்கள் போராட்டத்திற்கு தாக்கரே சகோதரர்கள் ஆதரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக பல ஆயிரம் மாணவர்கள் டெல்லியில... மேலும் பார்க்க

``பிரதமர் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்" - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் உண்ணாவிர... மேலும் பார்க்க

CJP : ``கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதில் பிரதமருக்கு என்ன பிரச்னை?" - அபிஜித் தீப்கே கேள்வி

நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியின் நள்ளிரவு வீடியோ முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரத முடிவு வரை' - என்ன நடந்தது?

உண்ணா விரதப் போராட்டம்!நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துடன் இணைந்து ஜூன் 28 அன்று சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க... மேலும் பார்க்க

மும்பை மாணவர்கள் போராட்டம்: போலீஸ் வேனை மடக்கிக் கேள்வி கேட்ட பெண்; இணையத்தைக் கலக்கும் ரியா யார்?

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மும்பையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மும்பை தாதர் பகுதியில் ஆயிரக்கான மாணவர்களும், பொதுமக்களும் கூடி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸா... மேலும் பார்க்க