செய்திகள் :

தமிழ்நாடு மின்வாரியத்தில் முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் மிஸ்ஸிங்! - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

post image

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் கடந்த மே 16, 17-ம் தேதிகளில் கிட்டத்தட்ட 18 ஹார்டு டிஸ்குகளட்திருடு போனது.

இது குறித்து தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுக் குறித்து சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்...

"தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலவலகத்தில் பல ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக போன மாதம் ரிப்போர்ட் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

அதனால், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருக்கும் விஜிலென்ஸ் முதல் கட்டமாக விசாரணை நடத்தினர். அதன் பின், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு சிலரை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் நான் பேசினால் சரியாக இருக்காது.

தலைமை அலுவலகத்தில் தற்போது உள்ள அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்து டேட்டாக்கள், சென்சிட்டிவ் தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பேக் அப் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகால டெண்டர், ஆவணங்கள், கான்ட்ராக்ட் ஊழியர்கள், நிலக்கரி வாங்கியது என அனைத்து தரவுகளுமே பேக் அப் எடுக்கக் கூறப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் குறித்த ஆவணங்களை ஏற்கெனவே சி.பி.ஐக்கு கொடுத்துவிட்டோம். இதன் தொடர்ச்சியாக, சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.

அந்தச் சஸ்பெண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திருட்டு நடந்திருக்கோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அனைத்தையுமே காவல் துறை விசாரித்து வருகிறார்கள்". என்றார்.

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க

ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி கூட்டத்தை தி... மேலும் பார்க்க