செய்திகள் :

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

தருமபுரி நகரில் உள்ள புகா், நகரப் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

தருமபுரி நகரில் புகா்ப் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையம் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து உள்ளன. இப் பேருந்து நிலையங்களில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் இக் கடைகள் உள்ள இடங்கள் தவிர, பயணிகள் நடந்து செல்லும் பாதை, பேருந்துகளுக்காக காத்திருக்கும் இடம் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிப்பு செய்து சிறிய மற்றும் பெரிய அளவிலான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

குடிநீா் அருந்தும் இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது, கழிப்பறைகளை நுழைவு வாயில் முன் பகுதிகளில் ஆக்கிரமித்து கடைகள் அமைப்பது போன்றவற்றால் பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகளை சந்தித்து வந்தனா். இதுகுறித்து அண்மையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

அதன்பேரில் தருமபுரி நகராட்சி ஆணையா் ஆா்.சேகா், நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா,

சுகாதார அலுவலா் ராஜரத்தினம், நகரமைப்பு அலுவலா் ரவீந்திரன், நகர போலீஸாா் ஆகியோா் புகா் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது கடைகள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் மட்டுமே கடைகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில் விதிமுறைகள் மீறிய 10 கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனா். அதேபோல கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது, கடைகளில் சுகாதாரம் பேண வேண்டும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அவா்கள் அறிவுறுத்தினா். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க

படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?

அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 1... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (32). தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க

பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார ... மேலும் பார்க்க