செய்திகள் :

`சாக அனுமதி தாருங்கள், மனைவியின் சித்ரவதை தாங்கமுடியவில்லை'- குஜராத் வாலிபர் கலெக்டருக்கு கடிதம்

post image

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் கிரித் பட்டேல். இவருக்கு முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது இரண்டாவது மனைவிக்கும், பட்டேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனது மனைவி தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பட்டேல் கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், ``எனது மனைவி பெண்களை பாதுகாக்க பயன்படும் சட்டத்தை தவறாக பயன்படுத்தி என் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் செய்கிறார்.

இதனால் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இது குறித்து போலீஸில் புகார் செய்ததற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர். சட்டநடைமுறையை பின்பற்றி எனது மனைவி பணம் கேட்கிறார். இதே நடைமுறையை பின்பற்றி அவரது முன்னாள் கணவர்களிடமும் பணம் வசூலித்தார். எனது மனைவி கொள்ளைக்கார மனைவியாக இருக்கிறார்.

என் புகார் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் நான் இறப்பதற்கு நிர்வாகம் அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளார். பட்டேல் புகார்கள் குறித்து இன்னும் விசாரித்து உறுதிபடுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று காந்திநகரை சேர்ந்த பங்கஜ் என்பவர் வேலை பறிபோனதால் விரக்தியில் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு வீட்டிற்கு வெளியில் ஒரு பேப்பரில் வீட்டிற்குள் தண்ணீர் குடிக்காதீர்கள், விஷம் கலந்திருக்கிறது. விஷ வாயு இருக்கிறது. முககவசம் அணிந்து வாருங்கள் எழுதி ஒட்டி இருந்தார். தற்கொலை செய்து 5 நாட்களாகி இருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

காலை 9 மணி லாகின், இரவு 9 மணி லாக் அவுட், நடுநடுவே காதைக் கிழிக்கும் மீட்டிங்குகள், நள்ளிரவில் வரும் 'ப்ரொடக்‌ஷன் இஷ்யூ' அழைப்புகள்... பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ஐடி வேலை, சிலருக்கு மன அழுத்தத்தின... மேலும் பார்க்க

`ஆபாச பேச்சு' - பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ், ஐஸ்வர்யா மீது சைபர் க்ரைமில் புகார்!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பிரபலமடைந்த தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா. இவர்களது சமூக வலைதள பக்கங்களை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாச ... மேலும் பார்க்க

7 நாடுகள், 23 துறைமுகங்கள் - உலகம் முழுக்க கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்து சிக்கிய கப்பல்!

குஜராத் மாநிலம் முந்த்ராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் கடலோர பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தினர். இதில் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது க... மேலும் பார்க்க

`கூண்டுக்குள்' குழந்தைகள்.. கைகொடுக்கும் செல்லப்பிராணிகள்; 'Pet parenting' தரும் ஆச்சர்ய மாற்றங்கள்!

"அம்மா... டாமிக்கு சாப்பாடு வெச்சாச்சா?"நாய் அல்லது பூனை வளர்க்கும் வீடுகளில், குழந்தைகள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. வீட்டைக் காக்க நாய்களும், எலிகளைப் பிடிக்க பூனைகளையும் வளர்த்த காலம் மாறிவிட்டது... மேலும் பார்க்க

மும்பை: 150 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு அனுமதி இல்லை; ஐரோப்பியர்களால் நடத்தப்படும் கிளப் தெரியுமா?

டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு அருகில் 27 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் ஜிம்கானா கிளப்பில் பணக்காரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கிளப்பை ... மேலும் பார்க்க