செய்திகள் :

தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி

post image

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வரை புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மீட்கப்பட்ட புலி குட்டிகள்

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் நாஹரோலே புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய பெண் புலி ஒன்று கவுடனகட்டே குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்தி வந்துள்ளது.‌‌ உடனடியாக அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடுமையான அழுத்தம் கொடுத்த நிலையில், வனத்துறையினர் அந்தப் பெண் புலியைக் கடந்த 27- ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர்.‌

அந்தப் புலியை நான்கு குட்டிகளுடன் பார்த்ததாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக குட்டிகளை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். கவுடனகட்டே சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்குள்ள விளைநிலம்

மீட்கப்பட்ட புலி குட்டிகள்

ஒன்றில் நான்கு குட்டிகளும் ஆதரவின்றி பரிதவித்து வந்ததைக் கண்டறிந்து உடனடியாக மீட்டுள்ளனர்.‌ பிறந்து சுமார் மூன்று மாதங்களேயான அந்த நான்கு புலி‌க்குட்டிகளையும் நேற்று தாயிடம் சேர்த்துள்ளனர். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் புலிகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவிப்பதற்கான ஆலோசனைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சில விலங்குகள் தங்கள் குட்டிகளையே சாப்பிடுவது ஏன் தெரியுமா?

விலங்குகள் சில நேரங்களில் தங்கள் சொந்தக் குட்டிகளையே கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. சுவீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அனீஷ் போஸ் இது குறித்துக் கூறுகையில், "தங்கள் கு... மேலும் பார்க்க

``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்ட... மேலும் பார்க்க

துருக்கியின் தானியக் களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்! - கோன்யா சமவெளியின் பகீர் பின்னணி?

துருக்கியின் மத்திய அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி (Konya Plain) அந்நாட்டின் 'தானியக் களஞ்சியம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கோதுமை, சோளம் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sugar beet) போன... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆடைக் கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் | Photo Album

வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வைகை ஆற்றில் கழிவுகள் வை... மேலும் பார்க்க

முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' - அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்

வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித - புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக... மேலும் பார்க்க

'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' - இது ஊர்க்குருவிகளின் கதை!

மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற... மேலும் பார்க்க