செய்திகள் :

தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி

post image

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வரை புலிகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மீட்கப்பட்ட புலி குட்டிகள்

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் நாஹரோலே புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய பெண் புலி ஒன்று கவுடனகட்டே குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ளல்களை ஏற்படுத்தி வந்துள்ளது.‌‌ உடனடியாக அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடுமையான அழுத்தம் கொடுத்த நிலையில், வனத்துறையினர் அந்தப் பெண் புலியைக் கடந்த 27- ம் தேதியன்று மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர்.‌

அந்தப் புலியை நான்கு குட்டிகளுடன் பார்த்ததாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக குட்டிகளை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளனர். கவுடனகட்டே சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்குள்ள விளைநிலம்

மீட்கப்பட்ட புலி குட்டிகள்

ஒன்றில் நான்கு குட்டிகளும் ஆதரவின்றி பரிதவித்து வந்ததைக் கண்டறிந்து உடனடியாக மீட்டுள்ளனர்.‌ பிறந்து சுமார் மூன்று மாதங்களேயான அந்த நான்கு புலி‌க்குட்டிகளையும் நேற்று தாயிடம் சேர்த்துள்ளனர். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் புலிகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவிப்பதற்கான ஆலோசனைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதான்!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்தாலும் அவற்றுக்கான வாழிட போதாமை என்பது மிகப்பெர... மேலும் பார்க்க

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை | Photo Album #Rain Alert 2025-26

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26Ditwah: இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு மேலும் பார்க்க

டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album

டிட்வா புயல் / புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்புகடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன வெள்ள பாதிப... மேலும் பார்க்க

நாகை: டிட்வா புயலால் இரவு முழுவதும் தொடர்ந்த மழை - கரையில் நிறுத்தப்பட்ட 3,700 மீன்பிடி படகுகள்

இலங்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும், கடலோர மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னைக்கு தெற்கே 4... மேலும் பார்க்க

டெல்லி: "காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது" - தலைமை நீதிபதி வருத்தம்!

டெல்லியில் காற்றுமாசு காரணமாக வழக்குகளை காணொலி காட்சி (Virtual) மூலம் விசாரிக்க வலியுறுத்திய இரண்டு வாரங்களுக்குள், வழக்குகளை விசாரிப்பது மட்டுமல்லாமல் டெல்லியில் வசிப்பதே அவதியாக இருப்பதை வெளிப்படுத்... மேலும் பார்க்க

முதுமலை: 391 இடங்களில், 782 ஆட்டேமெட்டிக் கேமராக்கள் - டிஜிட்டல் முறையில் புலிகள் கணக்கெடுப்பு!

தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம் , கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா வன உயிர் சரணாலயம் ஆகிய வனங்களை உள்ளிடக்கிய பகுதியே உலக அளவில் வங்கப் புலிகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க