செய்திகள் :

திண்டுக்கல் சீனிவாசனுக்கு திமுக போடும் ஸ்கெட்ச் - அமைச்சர் மகன் களத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னணி!

post image

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் பெரியசாமியின் மகனும் எம்.எல்.ஏ-வுமான ஐ.பி.செந்தில்குமார் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவருக்கு எதிராகப் போட்டியிடுவதற்காகவே பழனி தொகுதியிலிருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

பழனி டு திண்டுக்கல் காரணம் என்ன?

பழனி தொகுதியில் இரண்டு முறை தொடர் வெற்றி பெற்ற ஐ.பி.செந்தில்குமார், மூன்றாவது முறையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்ற நிலைமை இருந்தாலும், அவரை திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஐ.பி.செந்தில்குமார்

இது குறித்து நம்மிடையே பேசிய திமுக நிர்வாகிகள், “திமுக-வை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மையமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டுமென தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் அசைக்க முடியாத நபராக இருக்கிறார் அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அவரை வெற்றி பெற்றாலே திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக-வின் ஆதிக்கம் குறைந்துவிடும். அதோடு பழனி தொகுதியை தனிமாவட்டமாக்கி ஐ.பி.செந்தில்குமார் இடையூராக இருப்பார் என்பதால், அமைச்சர் சக்கரபாணியும் தலைமையிடம் பேசி செந்தில்குமாரை மாற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்தார்.

ஐ.பெரியசாமி

செந்தில்குமாரின் அப்பாவும் அமைச்சருமான ஐ.பெரியசாமியும் திண்டுக்கல் தொகுதியில் பிரசாரம் செய்தால் திண்டுக்கல் சீனிவாசனை தோற்கடித்து விடலாம் என்ற கணக்கு போட்டுதான் ஐ.பி.செந்தில்குமாரை திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த தேர்தல் செந்தில்குமாரின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக இருக்கும். அதே சமயம் திண்டுக்கல் சீனிவாசன் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய பரீட்சை இந்த தேர்தல்" என்றனர்.   

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க