செய்திகள் :

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

post image

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆர்.எம்.டி.சி காலனி அருகே வந்தபோது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று ஜேசுராஜ் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி ஜேசுராஜ் கீழே விழுந்தபோது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் திடீரென அவரை கத்திகளால் தாக்கினர். இதனால் உயிருக்குப் பயந்து சாலையில் ஓடினார். கொலை வெறி கும்பல் அவரை விரட்டிச் சென்று வாளால் வெட்டி தலையைச் சிதைத்தனர். இதனால் உயிருக்குப் போராடிய நிலையில் ஜேசுராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து கொலைவெறி அடங்காத கும்பல் யாகப்பன்பட்டியில் உள்ள அவரது இரண்டாவது மனைவி தீபிகாவையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வெட்டி படுகொலை செய்தனர். இதை தடுக்க சென்ற அவரது மகனுக்கும், உறவினர் மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சரிந்து விழுந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஜேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகா
ஜேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகா

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி. பிரதீப், டி.எஸ்.பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

பழிக்குப் பழி கொலையா?

இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான மாயாண்டி ஜோசப் என்பவரும் ஜேசுராஜூம் உறவினர்களாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள மாதா கோவில் திருவிழாவை ஜேசுராஜ்  தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளார். அப்போது கோவில் கணக்கு வழக்கில் முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி தலைமை பதவியில் இருந்து ஜேசுராஜை நீக்கியுள்ளனர்.

ஜேசுராஜின் வீடு
ஜேசுராஜின் வீடு

தலைமைப் பதவி பறிபோனதற்கு மாயாண்டி ஜோசப்தான் காரணம் என்று நினைத்த ஜேசுராஜ், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2024 மே மாதம் 23 ஆம் தேதி அன்று மாயாண்டி டாஸ்மார்க் கடையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுபான பாட்டில்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பொழுது ஜேசுராஜ், தன்னுடைய கூட்டாளிகள் நான்கு பேருடன் சென்று மாயாண்டியைக் கொலை செய்துள்ளார்.

இதில் ஜேசுராஜ் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜேசுராஜிவின் இரண்டாவது மனைவி தீபிகா மதுரை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கடந்த 19.12.25 அன்று ஜேசுராஜிவைப் பிணையில் எடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி ஜோசப்பின் உறவினர்கள், ஜேசுராஜின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ஜேசுராஜின் இருசக்கர வாகனம்
ஜேசுராஜின் இருசக்கர வாகனம்

மேலும் வழக்கிற்கு உதவியாக இருந்த இரண்டாவது மனைவி தீபிகாவையும் அவரது வீட்டிற்கு வெளியே வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த 21 நாளில் கணவன் மற்றும் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க