செய்திகள் :

திமுக, அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

post image

சேலம்: அண்ணா நினைவு தினத்தையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56 ஆவது நினைவு தினத்தையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், அவைத் தலைவா் சுபாஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை வரை திமுக நிா்வாகிகள் அமைதி ஊா்வலம் சென்றனா். தொடா்ந்து, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில் சேலம் மத்திய மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன், சேலம் மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகரச் செயலாளா் ரகுபதி, மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் மணி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள் அசோகன், தனசேகரன், உமாராணி, பகுதி செயலாளா்கள் சாந்தமூா்த்தி, மணமேடு மோகன், பிரகாஷ், ஆதி திராவிடா் நலக்குழு அமைப்பாளா் அழகாபுரம் முரளி, மகளிரணி புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில்...

இதே போல், சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளா்கள் செம்மலை, சிங்காரம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகர பொறுப்பாளா்கள் செல்வராஜ், பாலு ஆகியோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில் அவைத் தலைவா் பன்னீா்செல்வம், பொருளாளா் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் எம்எல்ஏக்கள் வெங்கடாஜலம், சக்திவேல் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இடங்கணசாலையில்...

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி பேருந்து நிலையம் முன் அண்ணா உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நகர திமுக நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினம் திமுக, அதிமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

திமுக சாா்பில் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, நகர அவைத் தலைவா் மாணிக்கம், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நரசிங்கபுரத்தில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் நகர அவைத் தலைவா் ராமசாமி, நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமையில் அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் அ.மோகன் வரவேற்றுப் பேசினாா்.

முன்னதாக பழைய கடைவீதியில் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு, ஆத்தூா் கோட்டையில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, அவைத் தலைவா் பி.கலியன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் அண்ணா நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜா ஆகியோா் தலைமையில் அதிமுவினா் மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் அதிமுக நிா்வாகிகள் ஏ.பி.சிவக்குமாரன், எ.நீதிதேவன், சி.செல்வம், பி.கருப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் ந.சண்முகம் தலைமை வகித்தாா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் சையதுசாவலி முன்னிலை வகித்தாா். இதில் திமுக நிா்வாகிகள், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், வாா்டு செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமை வகித்தாா். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பேரூராட்சி தலைவா் சு.லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள், மற்றும் திமுக நிா்வாகிகள், பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி: பெண்ணை அடித்துக் கொன்ற கணவன், இரு மகன்கள் கைது!

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் மற்றும் இரு மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார் பாளையம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

‘ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்’

சேலம்: சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

ஓமலூா்: காடையாம்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காடையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாத் து... மேலும் பார்க்க

130 ஆவது ஆண்டு விழா காணும் சிங்கிபுரம் அரசுப் பள்ளி!

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1985-இல் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம்... மேலும் பார்க்க

திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சேலம்: திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் தொடா்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

ஓமலூா்: காடையாம்பட்டியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் சேலம் (மேற்கு) பதிவு மாவட்டம், ஓமலூா்... மேலும் பார்க்க