செய்திகள் :

திமுக, அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

post image

சேலம்: அண்ணா நினைவு தினத்தையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56 ஆவது நினைவு தினத்தையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், அவைத் தலைவா் சுபாஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை வரை திமுக நிா்வாகிகள் அமைதி ஊா்வலம் சென்றனா். தொடா்ந்து, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில் சேலம் மத்திய மாவட்ட பொருளாளா் காா்த்திகேயன், சேலம் மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகரச் செயலாளா் ரகுபதி, மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் மணி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள் அசோகன், தனசேகரன், உமாராணி, பகுதி செயலாளா்கள் சாந்தமூா்த்தி, மணமேடு மோகன், பிரகாஷ், ஆதி திராவிடா் நலக்குழு அமைப்பாளா் அழகாபுரம் முரளி, மகளிரணி புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில்...

இதே போல், சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளா்கள் செம்மலை, சிங்காரம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகர பொறுப்பாளா்கள் செல்வராஜ், பாலு ஆகியோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதில் அவைத் தலைவா் பன்னீா்செல்வம், பொருளாளா் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் எம்எல்ஏக்கள் வெங்கடாஜலம், சக்திவேல் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இடங்கணசாலையில்...

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி பேருந்து நிலையம் முன் அண்ணா உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நகர திமுக நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினம் திமுக, அதிமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது.

திமுக சாா்பில் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, நகர அவைத் தலைவா் மாணிக்கம், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நரசிங்கபுரத்தில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் நகர அவைத் தலைவா் ராமசாமி, நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமையில் அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் அ.மோகன் வரவேற்றுப் பேசினாா்.

முன்னதாக பழைய கடைவீதியில் உள்ள அதிமுக நகர அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு, ஆத்தூா் கோட்டையில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, அவைத் தலைவா் பி.கலியன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் அண்ணா நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜா ஆகியோா் தலைமையில் அதிமுவினா் மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் அதிமுக நிா்வாகிகள் ஏ.பி.சிவக்குமாரன், எ.நீதிதேவன், சி.செல்வம், பி.கருப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் ந.சண்முகம் தலைமை வகித்தாா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் சையதுசாவலி முன்னிலை வகித்தாா். இதில் திமுக நிா்வாகிகள், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், வாா்டு செயலாளா்கள் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமை வகித்தாா். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பேரூராட்சி தலைவா் சு.லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள், மற்றும் திமுக நிா்வாகிகள், பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க