செய்திகள் :

"திமுக உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும்; இதை எதிர்காலத்திலும் சொல்வேன்" - பெ.சண்முகம்

post image

திமுக கூட்டணியில் இருந்து தான் கடந்தச் சட்டமனந்த் தேர்தலை சந்தித்தன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்.

தேர்தலுக்குப் பின், தவெகவிற்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், இந்த மூன்று கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தந்தன. பின்னர் தவெக அழைப்பு விடுத்ததன் பேரில், விசிக அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கிறது.

நேற்று திமுக நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின், 'தவெக ஆட்சி மூன்று மாதத்தில் கவிழும்' என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது...

"திமுக கூட்டணி என்கிற ஒன்றே இப்போது இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இப்போது இல்லை.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் போராடுவோம். இதை இப்போதும் சொல்கிறேன்... எதிர்காலத்திலும் சொல்லுவேன்.

ஏனெனில், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பிரச்னைகளில் யார் குரல் கொடுத்தாலும், யாருடைய ஆதரவைப் பெற வேண்டும் என்றாலும் அதற்கான முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யாராக இருந்தாலும் மூன்று மாதம் கூட இந்த ஆட்சி தாங்காது எனக் கூறுவது தவறு".

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் தலைவலி; பண மோசடி வழக்கை விசாரிக்க ஆளுநர் 'கிரீன்' சிக்னல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள பண மோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளார், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை... மேலும் பார்க்க

நிர்வாகிகள் மீது முட்டை வீச்சு... அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பு - கடும் நெருக்கடியில் மம்தா கட்சி!

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து... மேலும் பார்க்க

பூசல்களுக்கு மத்தியில் இன்று 'இந்தியா' கூட்டணி கூட்டம்; நடைபெறும் இடத்திலேயே ட்விஸ்ட் | Live updates

இன்று டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம்!இன்று இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூடுகிறது.தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பின் கூடும் இந்தியா கூட்டணியின்... மேலும் பார்க்க

TNEB-ல் இப்போது 300 AEE-களுக்கு வேலை; மீதி 116 பேர் தகுதியற்றவர்களா? தவெக அரசுக்கு திமுக கேள்வி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உள்ள‌ குளறுபடிகள் குறித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கை இதோ..."நாள் ஒரு பொய்! பொழுதொ... மேலும் பார்க்க