செய்திகள் :

IPL: "இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!"- வைபவ் சூர்யவன்ஷி

post image

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யவன்ஷி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இரண்டே அணிகள் தான் தன்னை ஏலத்தில் எடுக்க முன்வந்தன என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஏலத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனக்காக இரண்டு அணிகள் மட்டுமே ஏலம் கேட்டன, நான் நன்றாகத்தான் விளையாடுகிறேன், என்னுடைய ட்ரையல்ஸ்களிலும் நான் சிறப்பான பங்களிப்பைத்தான் கொடுத்திருந்தேன்.

இருப்பினும் மற்ற அணிகள் ஏன் என்னை ஏலம் கேட்கவில்லை என்று எனக்கு தோன்றி இருக்கிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இருக்கிறேன். என்னை ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற ஒரு சிறந்த அணிக்குள் கொண்டு வந்ததற்காக கடவுளுக்கு நான் இதுவரை குறைந்தது ஆயிரம் முறையாவது நன்றி சொல்லியிருப்பேன்.

இங்குள்ள பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், சக வீரர்கள், மேனேஜ்மென்ட், மீடியா குழு மற்றும் ட்ரெயினர்கள் என அனைவரும் ஒரு குடும்பத்தைப் போலத்தான் பழகுகிறார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

நாம் நம்முடைய சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறார்கள். எந்த அளவுக்கு சௌகரியமாக உணர்கிறோம் என்றால், நமக்கு ஏதேனும் கவலை அல்லது மன உளைச்சல் இருந்தால் கூட அதை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

அணியில் உள்ள அனைத்து சீனியர் வீரர்களும் எனக்கு வழிகாட்டுகிறார்கள். எது நல்லது, நான் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று எனக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

"நான் யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை"- கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் இந்திய அணியை வழிநடத்த இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது புதிய பொறுப்பு குறித்து மனம் ... மேலும் பார்க்க

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் க... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! - இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்!

இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளது. கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவது மட்டும... மேலும் பார்க்க

கோலிக்கு அவமரியாதை? `இது குரூரம்!' - இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்காக கொந்தளித்த ஹர்ஷா போக்ளே!

ஐபிஎல் 2026 தொடர் கோலாகலமாக முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பர... மேலும் பார்க்க

வெறும் பேட்டிங் அணி அல்ல, சாம்பியன் படை! ஆர்சிபியை செதுக்கிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் - யார் இவர்?

ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வந்திருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பெருமை அதன் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரையேசேரும். தொடர்ச்சியாக... மேலும் பார்க்க