செய்திகள் :

'Crooked and Stupid' - NBC தொகுப்பாளரை திட்டிவிட்டு; பேட்டியின் பாதியில் கிளம்பிய ட்ரம்ப்

post image

அமெரிக்க நேரப்படி, நேற்று முன்தினம், NBC நிகழ்ச்சியில் 'Meet the Press' நிகழ்ச்சிக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை பேட்டி எடுத்தார் அந்தச் சேனலின் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர்.

அந்தப் பேட்டியின் ஒரு பகுதியில், 'கலிஃபோர்னியா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை' குறித்து பேச்சு வந்தது.

ட்ரம்ப் உட்பட பல குடியரசுக் கட்சியினர் கலிஃபோர்னியா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதற்கு 'மோசடி' தான் காரணம் என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கடந்த ஜூன் 2-ம் தேதி,கலிஃபோர்னியாவில் தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் குடியரசுக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வந்தது. அதன் பின், மெயில் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய சில நாள்களில், குடியரசுக் கட்சியின் வாக்குகள் எண்ணிக்கை குறைந்தது.

காலிஃபோர்னியா தேர்தல் முதல் நாளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அன்றே வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்தலில் நாளை (ஜூன் 9) வரை மெயில் மூலம் வாக்களிக்கலாம். அந்த வாக்குகளின் எண்ணிக்கை அவ்வப்போது வெளியிடப்படும்.

அதில் தான் குடியரசுக் கட்சியின் வாக்குகள் குறைந்துள்ளது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை கிறிஸ்டன் வெல்கர் பேட்டியில் கேட்டப்போது, ட்ரம்ப் கோபமடைந்து அவரை முட்டாள் (Crooked and Stupid) என்று திட்டிவிட்டு, பேட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

மதுரை: யூட்யூபர் மாரிதாஸ் கைது!சென்னைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர்!

பிரபல யூடியூபர் மாரிதாஸ். இவர் யூடியூப்பில் அரசியல் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக விமர... மேலும் பார்க்க

`வெயிலில் நின்று வாக்குக் கேட்டோம்; அலைபேசியைப் பார்த்து வாக்களித்து விட்டார்கள்!' - அன்பில் மகேஸ்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-யின் 103-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தேவர் ஹாலில் நடைபெற்றது. இதில், பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,"வெற்றி தோல்விகளைக் கடந்து, நாளைய தலைமுறைய... மேலும் பார்க்க

ஈரான் போர்: `100 நாட்கள், 7000 உயிர்கள், முடிவற்ற அவலம்' - ட்ரம்ப் சொன்ன ‘விரைவான போர்’ இதுதானா?

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. "மிக விரைவாக முடிந்துவிடும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆரூடம் கூறிய இந்தப் போர், மத்திய கிழக்கை ரத்தக்களரியாக... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் தலைவலி; பண மோசடி வழக்கை விசாரிக்க ஆளுநர் 'கிரீன்' சிக்னல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள பண மோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளார், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை... மேலும் பார்க்க

நிர்வாகிகள் மீது முட்டை வீச்சு... அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பு - கடும் நெருக்கடியில் மம்தா கட்சி!

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து... மேலும் பார்க்க