செய்திகள் :

திருச்சி: நர்சிங் மாணவி உயிரிழப்பு; தடைசெய்யப்பட மருந்தை பயன்படுத்திய 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம்

post image

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, நர்சிங் கல்லூரி மாணவி சீதாலட்சுமி, கடந்த மாதம் 23-ம் திடீரென இறந்தார். அவரது சாவுக்கு மயக்க மருந்து அதிகமாக கொடுக்கப்பட்டதுதான் காரணம், கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சக நர்சிங் மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, சீதாலட்சுமி மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது.

trichy

அவர்களின் விசாரணை முடிவில் மாணவிக்கு அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட மருந்து, தடை செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த போது பணியில் இருந்த மயக்கவியல் மருத்துவர்கள் இரண்டு பேர் தற்போது வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர். தடை செய்யப்பட மருந்தை பயன்படுத்தியதால் நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா: ஆன்லைன் விளையாட்டைத் தடுத்ததால் ஆத்திரம்? - தந்தை, சகோதரியை குத்திக் கொலைசெய்த வாலிபர்!

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள ஹோசா அயோத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாயுடு. இவர் தனது மகனிடம் ஆன்லைன் மொபைல் கேம்களை விளையாட வேண்டாம் என்று கண்டித்தார். இதனால் க... மேலும் பார்க்க

ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகில் உள்ள மணக்காட்டுப்புதூரைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இவரின் தந்தை தனியார் வங்கி ஒன்றில்... மேலும் பார்க்க

வாடகை வீட்டை விற்க மறுத்த பேராசிரியை; 1,400 கி.மீ பயணித்து வந்து கொலைசெய்த தம்பதி - பகீர் சம்பவம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக... மேலும் பார்க்க

பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணி... மேலும் பார்க்க

திருச்சி: 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 7 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது

திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமி, தாய் தந்தை, இருவரும் பிரிந்த நிலையில் அவரது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந... மேலும் பார்க்க

லேப்டாப் திருட்டு; த.வெ.க நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது; திருச்சியில் அதிர்ச்சி!

திருச்சி, ஜங்சன் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மிப்டின் என்பவரது லேப்டாப் திருடு போய் உள்ளது. இது குறித்து, அவர் திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க