"திமுக உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும்; இதை எதிர்காலத்திலும் சொல்...
லேப்டாப் திருட்டு; த.வெ.க நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது; திருச்சியில் அதிர்ச்சி!
திருச்சி, ஜங்சன் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மிப்டின் என்பவரது லேப்டாப் திருடு போய் உள்ளது. இது குறித்து, அவர் திருச்சி ரெயில்வே போலீஸில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பரணிதரன், கே.கள்ளிக்குடியை சேர்ந்த ரோகன் தேவ் ஆகியோர் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மிப்டினின் லேப்டாப்பை திருடியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பை திருடி கைது செய்யப்பட்ட பரணிதரன் தமிழக வெற்றிக் கழகத்தில் மணிகண்டம் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜயின் கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சியிலும் லேப்டாப் திருட்டில் த.வெ.கவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















