செய்திகள் :

ஈரோடு: மதுபோதையில் போலீஸ் ஜீப்பை ஓட்டிய ஹெட் கான்ஸ்டபிள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்!

post image

ஈரோட்டில் இருந்து தாளவாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று சாலையின் இடது, வலது என தாறுமாறாக ஓடுவதை சக பயணிகள் பார்த்துள்ளனர். மற்றவர்கள் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு இயக்கப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை வீடியோ பதிவு செய்த சிலர், சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்துள்ளனர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தலைக்கேறிய மதுபோதையில் தாறுமாறாக போலீஸ் வாகனத்தை இயக்கிச் செல்லும் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது. சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்வதாக மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஹெட் கான்ஸ்டபிள் சரவண பிரகாஷ்

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஈரோட்டில் நேற்று முன்தினம் போலீஸ் வாகனம் ஒன்று தாறுமாறாக ஓடுவது போன்று சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரன் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். தாளவாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஹெட் கான்ஸ்டபிள் (நிலைய தலைமை காவலர்) சரவண பிரகாஷ் மதுபோதையில் போலீஸ் ஜீப்பை ஓட்டியது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தலைமை நிலைய காவலர் சரவண பிரகாஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.

திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ்; விடுதி வார்டன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், அரசு இட ஒதுக்கீட்டின் (7.... மேலும் பார்க்க

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும் 4 பிள்ளைகள்

கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஹசீனா (38) ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம... மேலும் பார்க்க

கும்பகோணம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 15 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

கும்பகோணம், நாச்சியார் கோயில் அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது 6 வயது மகளை அக்கா முறை... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?

கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்முறைகிருஷ்ண... மேலும் பார்க்க

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வ... மேலும் பார்க்க

TVK: மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர்கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாகமதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனிப்படை போலீ... மேலும் பார்க்க