செய்திகள் :

Salim Kumar: பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார் - மலையாள திரையுலகினர் இரங்கல்

post image

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றைய தினம் காலமானார். இவருக்கு வயது 56.

கடந்த சில காலமாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று காலமானார்.

Actor Salim Kumar
Actor Salim Kumar

இவர் மிமிக்ரிக் கலைஞராக தனது கரியரைத் தொடங்கினார். பிரபலமான 'கொச்சின் கலாபவன்' உள்ளிட்ட குழுக்களில் மிமிக்ரி கலைஞராக இருந்தவர், 1996-ல் சினிமாவுக்குள் வந்தார்.

மலையாள சினிமாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் சலீம் குமார் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 'தென்காசிப்பட்டணம்', 'கல்யாணராமன்', 'சிஐடி மூசா' உள்ளிட்ட சில படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக மாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதன் பிறகு, இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், முதன்மை கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'ஆதாமின்டே மகன் அபு' படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

நடிகர் என்பதைத் தாண்டி இயக்குநராகவும் சில படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக நடிகர் ஜெயராமை வைத்து 'தெய்வமே கைதொழாம் கே குமார் ஆகணம்' என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. மாலிவுட்டைத் தாண்டி தமிழிலும், 'நெடுஞ்சாலை', 'மரியான்' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

Actor Salim Kumar
Actor Salim Kumar

சினிமாவைத் தாண்டி, அரசியலிலும் சலீம் குமார் இயங்கி வந்தார். சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சலீம் குமாரின் மறைவுக்குத் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்கு உத்தரவிட்ட கோர்ட்!

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘ஆப்பீசர் ஆன் டியூட்டி’ மலையாள சினிமாவில் ஒரு காட்சியில் பெண் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தும் மொபைல் எண் காண்பிக்கப்பட்டது. வழக்கமாக சினிமாவுக்காக டம்மி நம்பர... மேலும் பார்க்க

'ஜிஹாதி' அவதூறு முதல் போலீஸ் விசாரணை வரை; மலையாளத் திரையுலகை உலுக்கும் த்ரிஷ்யம் நடிகை விவகாரம்

மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது.நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும்... மேலும் பார்க்க

"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்தைப் பெற்ற மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி, தற்போது அவருடைய மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்திய சினிமாவிற்கு மம்மூட்டி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய ட... மேலும் பார்க்க

கேமரா, நடிகர்கள் இல்லாமல் ஒரு படம் - மலையாள சினிமாவிலிருந்து முழுநீள ஏ.ஐ படம்!

இன்றைய தேதியில் ஏஐ, நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களைச் சாத்தியப்படுத்திக் காட்டிவிடுகிறது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களும் விரிந்து, ஏஐ-ம் நம் அன்றாடத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. சி... மேலும் பார்க்க

Drishyam 3: "என் சொந்த வாழ்க்கையையே பல வழிகளில் 'த்ரிஷ்யம்' படம் மாற்றியது"- எஸ்தர் அனில் நெகிழ்ச்சி

'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகமான 'த்ரிஷ்யம் 3' திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் மூன்று பாகங்களிலும் ஜார்ஜ்குட்டி... மேலும் பார்க்க

த்ரிஷ்யம் 3: "ஜார்ஜ் குட்டியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.!"- மோகன்லால் நெகிழ்ச்சி

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மீனா மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருப்பார். தமிழ், இ... மேலும் பார்க்க