செய்திகள் :

திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச மெசெஜ்; விடுதி வார்டன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், அரசு இட ஒதுக்கீட்டின் (7.5%) கீழ் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும்... தரமற்ற உணவு வழங்குவதாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆண்கள் விடுதிக்கு சென்று உணவருந்துங்கள் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். உணவு தயாராகிவிட்டதா? என்பதை தெரிவிக்க வேண்டி அங்குள்ள பெண்களின் தொலைபேசி எண்களை வாங்கிவைத்துள்ளார்,அந்த விடுதியின் வார்டன்.

இதனைப் பயன்படுத்தி, அந்த வார்டன் இரவு நேரங்களில் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவிகள் கல்லூரி பொறுப்பு தாளாளர் மற்றும் சில ஆசிரியர்களிடம் சொன்னபோது, அவர்கள் மாணவிகளைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு,  ‘அனுசரித்துச் செல்லுங்கள்’ எனக் கூறியதாக, மாணவிகள் குற்றம்சாட்டுகிறார்கள். தொடர்ச்சியாக ​கடந்த 6 மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதால், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் மாணவிகள் புகார் அளித்தனர்.

Sexual harassment

இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி பொறுப்பு தாளாளர் செல்வகுமார் உட்பட 6 பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதனை அடுத்து தற்போது புகார் கொடுத்த மாணவி உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து ​தற்போது பயிலும் கல்லூரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தங்களை உடனடியாக வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்த கணவன் - ஆதரவின்றி தவிக்கும் 4 பிள்ளைகள்

கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த ஹசீனா (38) ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம... மேலும் பார்க்க

கும்பகோணம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 15 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

கும்பகோணம், நாச்சியார் கோயில் அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது 6 வயது மகளை அக்கா முறை... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?

கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்முறைகிருஷ்ண... மேலும் பார்க்க

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வ... மேலும் பார்க்க

TVK: மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர்கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாகமதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனிப்படை போலீ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; 'மூவரும் நலம்' - போலீஸ் நிம்மதி

இளம் பெண்ணான மனைவி வேறு ஒரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், வீட்டில் ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் இருக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே வீட்டுக்குள் வரும் கணவர், அவனை வெளியே வரச்சொல்லு ... மேலும் பார்க்க