செய்திகள் :

TVK: மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்

post image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர் தனிப்படை போலீஸாரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீஸார் பாடாலூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட, பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (வயது: 36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய த.வெ.க பிரமுகர் ஆவார்.

letter
letter

இதனால், போலீஸாரின் விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை த.வெ.க மாவட்ட தலைமை அலுவலகம், உமேஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருநது அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

மதுபாட்டில்கள் விற்பனை செய்த த.வெ.க பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; 'மூவரும் நலம்' - போலீஸ் நிம்மதி

இளம் பெண்ணான மனைவி வேறு ஒரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், வீட்டில் ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் இருக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே வீட்டுக்குள் வரும் கணவர், அவனை வெளியே வரச்சொல்லு ... மேலும் பார்க்க

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - ரயில் நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது... மேலும் பார்க்க

உறவை புதுப்பிக்க மறுப்பு; மாஜி காதலியை அலுவலகத்திற்குள் ஓடஓட விரட்டி 20 முறை குத்திக்கொன்ற வாலிபர்

காதல் தோல்விகள் சில நேரங்களில் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் கொலை போன்ற கொடூர செயல்களில் இறங்கி விடுகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை அலுவலகத்திற்குள் புகுந்து ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் ... மேலும் பார்க்க

நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.அவரின் மனைவி கல்யாண... மேலும் பார்க்க

திருச்சி: மேற்கு தொகுதியில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள இருவர் - போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி, பொன் நகர் புது செல்வா நகரைச் சேர்ந்தவர் சால்மன் பார்ஷ் (வயது: 37). இவர், கடந்த 17 -ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார். அங்கு, அவரது உடமைகளை குடியேற்ற பிரி... மேலும் பார்க்க