செய்திகள் :

கிருஷ்ணகிரி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது; சிக்கியது எப்படி?

post image

கணவரைப் பிரிந்து வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான திருமணமான இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இங்கு தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்று கொண்டிருந்த நிலையில், அவர் வயிறு வீக்கமடைந்ததைப் பார்த்து உறவினர்கள் விசாரிக்க, அதைப்பற்றி அப்பெண்ணுக்கு எதுவும் தெரியாத நிலையில் வயிற்றில் கட்டி உருவாகியிருக்குமோ என்ற சந்தேகத்தில் ஊத்தங்கரையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பின்பு ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட இன்ஸ்பெக்டர் வளர்மதி உள்ளிட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தினமும் ஆடு மேய்க்க அப்பெண் செல்லும்போது, அவரைப்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வரும் மிட்டப்பள்ளியைச் சேர்ந்த 53 வயதான கோவிந்தசாமி என்பவர் நல்லவிதமாகப் பழகி வந்திருக்கிறார்.

பின்பு அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் காரணமாக அவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியிருந்த கோவிந்தசாமியை தருமபுரி மாவட்டம் முத்தானூர் பகுதியில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வ... மேலும் பார்க்க

TVK: மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர்; கட்சியில் இருந்து நீக்கிய மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர்கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாகமதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனிப்படை போலீ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; 'மூவரும் நலம்' - போலீஸ் நிம்மதி

இளம் பெண்ணான மனைவி வேறு ஒரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், வீட்டில் ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் இருக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே வீட்டுக்குள் வரும் கணவர், அவனை வெளியே வரச்சொல்லு ... மேலும் பார்க்க

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - ரயில் நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது... மேலும் பார்க்க

உறவை புதுப்பிக்க மறுப்பு; மாஜி காதலியை அலுவலகத்திற்குள் ஓடஓட விரட்டி 20 முறை குத்திக்கொன்ற வாலிபர்

காதல் தோல்விகள் சில நேரங்களில் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. இதனால் கொலை போன்ற கொடூர செயல்களில் இறங்கி விடுகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை அலுவலகத்திற்குள் புகுந்து ... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; வீட்டுக்குள் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவர் மனைவி அமுதா (50). இவர்களது மகன் சிவராஜ், மகள் சிவரஞ்சனி. இருவருக்கும் ... மேலும் பார்க்க