செய்திகள் :

முகேஷ் அம்பானியை முந்திய டிக்டாக் அதிபர்! ஆசியாவின் புதிய பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்த சாங் யிமிங்

post image

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி எப்போதுமே ஆசியாவின் முன்னணிப் புள்ளியாகப் பார்க்கப்பட்டு வந்தார்.

ஆனால், ஜூன் 5, 2026 அன்று வெளியாகியுள்ள புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய அறிக்கையின்படி, பிரபல 'டிக்டாக்' செயலியின் தாய் நிறுவனமான 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் சாங் யிமிங், முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.

சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு அசாத்திய வளர்ச்சியைக் கண்டு 92.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன், அவர் சீனாவின் முதன்மைப் பணக்காரர் என்ற அந்தஸ்தையும் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளார்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ஒரு சிறிய வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தொடங்கப்பட்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி உலகையே வியக்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவரது சொத்து மதிப்பு மிகவும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது அது ஏழு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்த அசுரத்தனமான வெற்றிக்கு, செயற்கை நுண்ணறிவு துறையில் பைட் டான்ஸ் நிறுவனம் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளே மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் தற்போதைய நிலையில் மாதத்திற்கு பல மில்லியன் பயனர்களைப் பெற்று சீனாவின் மிகவும் பிரபலமான செயலியாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு சந்தையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக பைட் டான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் கணிசமான சரிவு ஏற்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட வணிகப் பரிமாற்றங்கள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பைட் டான்ஸ் மீதான ஆபத்துகள் முற்றிலுமாகக் குறைந்து அதன் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி மாற்றங்களால் முகேஷ் அம்பானி ஆசிய அளவில் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ள வேளையில், இந்தியாவின் கௌதம் அதானி ஆசியாவின் முதல் பணக்காரராகத் தனது இடத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.!

`ஆண்டுக்கு ரூ.200 கோடி வாடகை மிச்சமாகும்' - ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டடத்தை வாங்கிய மகா. அரசு

மும்பையின் தென்பகுதியில் இருக்கும் ஏர் இந்தியா கட்டடம் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்த போது இந்த ஏர் இந்தியா கட்டிட... மேலும் பார்க்க

சுவிட்சர்லாந்தின் சாம்ராஜ்யம் சரிகிறதா? `உலகப் பணத்தின்' புதிய அரியணை ஏறும் ஹாங்காங்!

பல தசாப்தங்களாக உலகப் பணக்காரர்களின் ரகசியப் புகலிடமாகவும், எல்லை தாண்டிய நிதிப் பரிவர்த்தனைகளின் அசைக்க முடியாத மன்னனாகவும் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் சாம்ராஜ்யம் சரிந்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உ... மேலும் பார்க்க

100 ஆண்டுகள்... மக்களின் நம்பிக்கையில் செஞ்சுரி அடித்த `லயன் பஸ்' கம்பெனி!

திருச்செந்தூர் ரூட்டில் இருந்து திருநெல்வேலிக்கு பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் அலுவலர்கள் என்று அனைவரின் மத்தியிலும் பிரபலமாக வலம் வரும் லயன் பஸ், இந்த ஆண்டோடு செ... மேலும் பார்க்க

இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் திடீர் தடை! 20 ஆண்டுகளுக்குப் பின் அதிர்ச்சி - காரணம் என்ன?

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். இந்தியாவின் அல்போன்சா, கேசர், பங்கனப்பள்ளி மற்றும் லங்ரா போன்ற மாம்பழ ரகங்களை ஒருமுறை சுவைத்தவர்கள் அதன் சுவையை மறக்க மாட்டார்கள். ஆ... மேலும் பார்க்க

Polymatech: சென்னையில் ஒரு செமிகண்டக்டர் ஆலை!

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு பல விஷயங்களிலும் முன் உதாரணமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செமிகண்டக்டர்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் முதல் என்பது பலரும் அறியாத ஒரு செய்தி.செமிகண்டக... மேலும் பார்க்க

'10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக 10 டிப்ஸ்' - தொழில் முனைவோருக்கான சக்சஸ் ஃபார்முலா!

சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம் என்பதைத் தாண்டி, பணத்தைப் பற்றிய கவலையின்றி சுதந்திரமாக இருப்பதே ஒவ்வொரு தொழில்முனைவோரின் கனவு. இந்த நிதிச் சுதந்திரத்தை 10 ஆண்டுகளில் எட்டுவது சாத்தியமா? நிச்சயமாகச் ச... மேலும் பார்க்க