'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட...
'அண்ணாமலை இயக்கத்திற்கு ரஜினி ஆலோசனையா?' - லதா ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்ற இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கினார். இது தொடர்பான காணொளியை இரண்டு தினங்களுக்கு முன்பு லதா ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.
பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை புதிய இயக்கத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கிறது எனச் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது.

ஆனால், இந்த இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதமே லதா ரஜினிகாந்த் தொடங்கிவிட்டார் என அவரே விளக்கம் தந்திருக்கிறார். இந்நிலையில், 'ரிப்பப்ளிக் வோர்ல்ட்' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.
'அண்ணாமலையின் மக்கள் இயக்க அறிவிப்புக்குப் பிறகு உங்களுடைய இயக்கம் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டது’ என்று சமூக வலைதளங்களில் பேசப்படுவது குறித்து, '' சமூக வலைதளங்கள் சில நேரங்களில் மிகவும் எதிர்மறையாகவும் டாக்சிக்காகவும் மாறிவிடுகின்றன. அவர்கள் நல்ல விஷயங்களைப் பரப்பலாம் என்பதுதான் என் விருப்பம்.
மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எங்களுடைய இயக்கத்தின் திட்டங்களை நாங்கள் ஏற்கெனவே வரிசையாக முடிவு செய்து வைத்திருந்தோம்.

மாநிலத்திற்கான ஒரு சிறந்த இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் எங்களின் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்." என்றவர், அண்ணாமலையின் இயக்கத்திற்கு ரஜினியின் ஆலோசனைகள் இருக்குமா, ரஜினியை அடிக்கடி அண்ணாமலை சந்திக்கிறாரே எனச் சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்படுவது குறித்து லதா ரஜினிகாந்த், "இது குறித்து நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.
ஏனென்றால், பொதுவாகவே நாங்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்குள் இழுக்கப்படுகிறோம். அதற்கு நாங்கள் ஒவ்வொரு முறையும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது.
உண்மை என்ன என்பது எப்போதும் நிலைத்து நிற்கும். நாங்கள் தூய்மையான நோக்கத்துடன் எங்கள் வேலையைச் செய்து வருகிறோம்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, நல்ல ஆற்றல் கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.















