செய்திகள் :

"'நோ கமென்ட்ஸ்' சொல்றதுக்கா இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க?" - தவெக அமைச்சரை விமர்சித்த சீமான்

post image

சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலைப் பாடகர் தேனிசை செல்லப்பாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாதக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக-வின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நோ கமென்ட்ஸ், இதைப்பற்றிப் பிறகு பேசலாம்" எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பாகவும், திருச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தை உருவாக்குவோம் எனக் கூறியிருந்தது தொடர்பாகவும் சீமான் பேசியிருக்கிறார்.

அமைச்சர் ஶ்ரீநாத்
அமைச்சர் ஶ்ரீநாத்

சீமான் பேசுகையில், "மதுரையில் பேசும்போது நம்முடைய மாண்புமிகு முதல்வர், 'மோடி ஜி, இந்த மீனவர்களுக்காக நீங்கள் கச்சத்தீவை மட்டும் மீட்டுக் கொடுத்துடுங்க, அது போதும்' என்று கோரிக்கை வைக்கிறார்.

சரி, இது தொடர்பாகத் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள், 'சார், இந்த கச்சத்தீவை மீட்பது குறித்து உங்கள் கருத்து என்ன?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அங்கிருந்த அதிகாரி முன்கூட்டியே மூன்று முறை 'நோ கமென்ட்ஸ்' என்று கூறுகிறார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சரும், 'அதுபற்றி இப்போது நாம் பேச வேண்டாம். நோ கமென்ட்ஸ்' என்கிறார். ஏன்டா, மேடைக்கு மேடை கச்சத்தீவை மீட்போம் என்று பேசிவிட்டு, செய்தியாளர்கள் கேட்கும்போது 'நோ கமென்ட்ஸ்' என்று சொல்வதற்காகவா இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க?

அடுத்ததாக அமைச்சர், 'நாங்கள் தூத்துக்குடியை ஒரு போர்ட்ஸ் நகரமாக, ஒரு துறைமுக நகரமாக மாற்றுவோம். அதுதான் எங்கள் தலைவருடைய கனவு' என்கிறார்.

டேய், தூத்துக்குடி ஏற்கனவே ஒரு துறைமுக நகரம்தான்டா. நாம் கடலில் விழுந்து சாகுறதா அல்லது கிணற்றில் விழுந்து சாகுறதா என்றே தெரியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் இவர்களது அரசியல் முட்டுச்சந்தாகவே இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் திருச்சியில் பேசும்போது ஒரு வரலாற்றுப் பெருமுழக்கத்தை வைக்கிறார். 'எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தை அமைப்போம்' என்கிறார்.

டேய்! உன்னைத்தான்டா நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகளாக நீங்கள் இருக்கிறீர்களே! இதற்கிடையே நம் முதல்வர், 'இன்னும் கொஞ்சம் எனக்கு ஆதரவு அளித்திருக்கலாம்' என்று கேட்கிறார்.

அடப்பாவி, இப்போது உங்களுக்குக் கொடுத்திருப்பதே மிக அதிகம்! உண்மையைச் சொல்வதானால், இது ஒரு பெரிய அரசியல் பேரிடர்" எனக் கூறியிருக்கிறார்.

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்... மேலும் பார்க்க

ஸ்டாலின் படத்துடன் வந்த திமுக மேயர்; திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் த... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோவில்: "25 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு; கண்காணிக்காதது ஏன்?" - நீதிபதி கேள்வி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த ரூ.100 டிக்கெட் வினியோகம் ச... மேலும் பார்க்க

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``உண்மைக்கு புறம்பான செய்தி" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்... மேலும் பார்க்க

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! - உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிப... மேலும் பார்க்க