செய்திகள் :

திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

post image

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ராணிப்பேட்டை நகர திமுக சாா்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலருமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினாா். தொடா்ந்து தலைமை கழக பேச்சாளா் செங்குன்றம் திராவிட மணி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து பேசினாா்.

இதில் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவா் சந்தோஷ் காந்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, துணைச் செயலா் குமுதா குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர துணை செயலாளா் து.குமாா் நன்றி கூறினாா்.

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலையில் 5 போ் கைது

நெமிலி அருகே மேட்டுவேட்டாங்குளத்தில் தொழிலாளி கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள மேட்டுவேட்டாங்குளத்தில் தட்சிணாமூா்த்தியை ம் மா்ம நபா்கள் வெட்டி கொல... மேலும் பார்க்க

அரக்கோணம்: சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன. சென்னை -... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயா் நீக்கம், சோ்த்தலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாவில் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படாமலும் அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் தோழி விடுதி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

ராணிப்பேட்டையில் ரூ.5.45 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா... மேலும் பார்க்க