செய்திகள் :

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் - சிக்கவைத்த சிசிடிவி!

post image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகைகள் மற்றும் பட்டாடைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் கோயில் அம்மன் சன்னிதி அனுப்பு மண்டபத்தில் வைத்து எண்ணப்படும்.

கடந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. கோயிலின் பிரதான உண்டியல்கள் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பில் அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று காணிக்கைகளை எண்ணினர். இதன்படி சுமார் 2 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாய் மற்றும் பலமாற்று பொன் இனங்கள் 85 கிராம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

ராமேஸ்வரம் கோயில்
கோயில் ஊழியர் மணிகண்டன்

இதனிடையே உண்டியல் எண்ணிக்கையின் போது காணிக்கை பணத்தினை, கோயிலில் தூய்மை பணியாளராக பணியாற்றும் மணிகண்டன் என்பவர் திருடியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதில் மணிகண்டன் ஒரே நாளில் 3 முறை பணத்தினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து திருக்கோயில் செயல் அலுவலர் மாரியப்பன், பணத்தை திருடிய மணிகண்டன் மீது கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர். இவர் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2023-ல் இங்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்த நிலையில் மணிகண்டன் இது போல காணிக்கை பணத்தில் கைவத்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வே... மேலும் பார்க்க

ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்... 'திருத்திய' போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும் முக... மேலும் பார்க்க

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.கோவைகடந்த டிசம்பர் 15-ம... மேலும் பார்க்க

திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம்; "போதை அல்ல; மனநலம் பாதிக்கப்பட்டவர்" - ஆணையர்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர்.இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக... மேலும் பார்க்க

திருத்தணி: ஒடிசா இளைஞர் தாக்குதல் சம்பவம்; "தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு" - திருமாவளவன் கண்டனம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய... மேலும் பார்க்க