செய்திகள் :

கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?

post image

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கோவை
கோவை

கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவர்கள் இருவரும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்குச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த இரண்டு நபர்கள், வட மாநில இளைஞர்களிடம் தமிழில் ஏதோ கேட்டுள்ளனர்.

தங்களுக்குப் புரியாததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சைகை மூலம் விளக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 2 பேர் கொண்ட கும்பல், திடீரென்று இரண்டு தொழிலாளர்களையும் கடுமையாகத் தாக்கினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளனர்.

கோவை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல்
கோவை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல்

அருகில் இருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி வட மாநில இளைஞர்களைப் பத்திரமாக மீட்டனர். தாக்குதல் நடத்திய நபர்கள் வட மாநில இளைஞர்களை மிரட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வட மாநிலத் தொழிலாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல்
கோவை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய அந்த மர்ம ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள்.

'எஸ்.பி ஆபீஸுக்கு போய் வீலிங் வீடியோ போடப் போறோம்'- ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்... 'திருத்திய' போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று சாகசங்கள் செய்து அதனை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டா மற்றும் முக... மேலும் பார்க்க

திருப்பூர்: காவலரைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம்; "போதை அல்ல; மனநலம் பாதிக்கப்பட்டவர்" - ஆணையர்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் அரிசிக் கடை வீதி வீரராகவப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக அதிகளவில் வந்திருந்தனர்.இந்நிலையில் அங்கு படுத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பொதுமக... மேலும் பார்க்க

திருத்தணி: ஒடிசா இளைஞர் தாக்குதல் சம்பவம்; "தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு" - திருமாவளவன் கண்டனம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய... மேலும் பார்க்க

திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்... மேலும் பார்க்க

பார்சலில் வந்த தாலி; ஏற்காட்டில் இளம்பெண்ணை கொன்று வீசிய இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம். இவரது மனைவி சுமதி (25). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ள... மேலும் பார்க்க

வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. `இதுபற்ற... மேலும் பார்க்க