செய்திகள் :

திருச்சி: `முறையற்ற தொடர்பு' - கண்டித்த தொழிலதிபர் அடித்துக் கொலை... 5 வாலிபர்கள் கைது

post image

திருச்சி, அரியமங்கலம் பெரியாா் தெரு, அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (வயது: 64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவா், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டூா் கைலாஷ்நகா் பகுதியில் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தாா். அவா் சாலை விபத்தில் காயமடைந்திருக்கலாம் என நினைத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் பொன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, பொன்ராஜ் உடலில் இருந்த காயங்களை வைத்து, அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அவர் இறந்துகிடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பொன்ராஜை சிலா் தாக்குவது பதிவாகியிருந்தது. இதுதொடா்பாக, இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

கைது

இதில், அரியமங்கலம், முத்துநகரை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (வயது: 27) என்பவா் தனது நண்பா்களான திருநெடுங்களம், வடக்குத் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் பாரதிராஜா (வயது: 24), அரியமங்கலம் அம்மா குளத்தைச் சோ்ந்த நல்ல முத்து மகன் சந்தோஷ்குமாா் (வயது: 18) உள்ளிட்ட சிலருடன் சோ்ந்து பொன்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

பொன்ராஜின் உறவுப்பெண் ஒருவருக்கும், நிஷாந்துக்கும் முறையற்ற தொடா்பு இருந்ததாகவும், அதை பொன்ராஜ் கண்டித்ததால் அவரை கொலை செய்ததாகவும் நிஷாந்த் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இதற்கிடையில், இந்த வழக்கை போலீஸாா் கொலை வழக்காக மாற்றி விசாரிக்க முயன்றபோது, ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (வயது: 20), ஸ்ரீரங்கம், வடக்கு வாசலை சோ்ந்த ரங்கராஜ் மகன் குணசேகா் (வயது: 21) ஆகிய இருவரும் ஏற்கெனவே திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர். முறையற்ற தொடர்பை கண்டித்ததால், முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

நித்தியானந்தா சீடர்களை ஆசிரமத்திலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்! நடந்தது என்ன?

ராஜபாளையம் அருகே காட்டுப்பகுதியில் நீதிமன்ற உத்தரவினை மீறி இரு வேறு இடங்களில் ஆசிரமங்கள் கட்டி வாழ்ந்து வந்த நித்தியானந்தா சீடர்களை வருவாய் துறையினரும், போலீசாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த ச... மேலும் பார்க்க

கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ஒரு கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்றுள்ளது. தொடர்ந்து அவர் வழிவிடாமல் இருந்த காரணத்தால் ஆம... மேலும் பார்க்க

`முட்டி போடு டா' - கோவை சீனியர் மாணவரை சுற்றி சுற்றி தாக்கிய ஜூனியர் மாணவர்கள்

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் முதுகலை சீனியர் மாணவர் ஒருவரை, இளங்கலை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏ... மேலும் பார்க்க

Google Review: விடுதி குறையை ஆன்லைனில் சுட்டிக் காட்டிய மாணவர் மீது தாக்குதல்; நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் மங்களூரில், ஆன்லைனில் எதிர்மறையான விமர்சனம் எழுதியதற்காக 18 வயது பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகியைச் சேர்ந்த விகாஸ் என்ற மாணவர், கடந்... மேலும் பார்க்க

மருத்துவ செலவுக்கு ரூ.13 லட்சம் கடன் வாங்கியவரிடம் கந்து வட்டி வசூலித்து, தாக்குதல் - பெண் கைது!

சென்னை அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரின் தம்பி சதீஷ்குமார். கடந்த 2023-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சதீஷ்குமார் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்... மேலும் பார்க்க

டிரம்மில் பல துண்டுகளாக கணவரின் உடல்; கொன்றுவிட்டு காதலனுடன் ஹோலி கொண்டாடிய பெண் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவர் செளரப் ரஜபுத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய ஆண் நண்பர்... மேலும் பார்க்க