செய்திகள் :

`திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' - அனிதா ராதாகிருஷ்ணன்

post image

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ”தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுப் பேசினர். முதலில் பேசிய மனோஜ் பாண்டியன், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை எனப் பேச எடப்படி பழனிசாமிக்கு அருகதை இல்லை.

மனோஜ் பாண்டியன்

அவர் முதல்வராக இருந்த போதுதான் கொடநாடு கொலை, கொள்ளை நடந்தது. கொடநாடு என்றாலே நடுங்குபவர்தான் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டனை பெற்று மீண்டும் அவர் எந்த பதவிக்கும் வர முடியாத நிலை ஏற்படும். தன்னை பாதுகாக்க தமிழகத்தையே அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க என்ற கட்சி திராவிடக் கொள்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தி.மு.கவை வீழ்த்தி விடலாம் என பா.ஜ.கவினர் கங்கணம் கட்டிம் கொண்டு சுற்றி வருகிறார்கள். எந்தக் கொம்பனாலும் தி.மு.கவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. எனக்கு 6 முறை எந்த இடத்திலும் தனிகுனிவை ஏற்படுத்தி விடாமல் வெற்றி பெற வைத்தவர்கள் திருச்செந்தூர் தொகுதி மக்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் தொகுதியை வீழ்த்திவிடலாம் என பா.ஜ.கவினர் சுற்றி வருகிறார்கள். இந்த பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் விட்டுக் கொடுப்பார்களா? சிறுபான்மை மக்களும், வி.சி.கவினரும் அ.தி.மு.க, பா.ஜ.கவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.கவுடன் சேர்ந்த போதே அ.தி.மு.க காலாவதி ஆகி விட்டது.” என்றார்.    

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க