செய்திகள் :

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

post image

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமாருக்கும் இந்துமதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் அசோக்குமாரைப் பிரிந்த இந்துமதி, தனியாக தன்னுடைய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று இந்துமதி, தன்னுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது இந்துமதியை வழிமறித்த அசோக்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொலை
கொலை

இந்துமதியும் அசோக்குமாரும் சண்டை போடும் தகவல் இந்துமதியின் உறவினர் சந்திரபோஸ் என்பவருக்கு கிடைத்தது. உடனே சந்திரபோஸ், தன்னுடைய நண்பரான டிரைவர் நித்தியானந்தம் (38) என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றார். பின்னர் சந்திரபோஸ், நித்தியானந்தம் ஆகியோர், அசோக்குமாரிடம் பேச்சுவார்ததை நடத்தி அவரை சமரசப்படுத்த முயன்றனர். அப்போது ஆத்திரத்திலிருந்த அசோக்குமார், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தியானந்தத்தை சரமாரியாக குத்தினார். இதில் நித்தியானந்தம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அசோக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிய நித்தியானந்ததை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நித்தியானந்தம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' - கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞரு... மேலும் பார்க்க

காட்டிக்கொடுத்த டி.என்.ஏ. சோதனை; வாய்பேச முடியாத மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

மும்பை தென்பகுதியில் வசிக்கும் வாய்பேச முடியாத 20 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் சைகை மூலம் தனது பாட்டியிடம் தெரிவித்தார். வயிற்றில் பூச்சிகள் ஊர்வது போன்று இருப்பதாக தெரிவித்தார... மேலும் பார்க்க

ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்

கஞ்சா விற்பனை முதல் கச்சா ஃபிலிம் தொழிற்சாலையின் வெள்ளி கலந்த மண் திருட்டு வரை நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினரே கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், ஊட்டி நகர மத... மேலும் பார்க்க

`திருமணமானவருடனான காதலை கைவிட கெஞ்சினேன்' - சேலம் மருத்துவ மாணவி கொலை வழக்கில் தந்தை கைது

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

தீராத சொத்து தகராறு; தங்கும் விடுதியில் வியாபாரி குத்திக் கொலை; திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.பின்னர், அ... மேலும் பார்க்க