கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
திருவண்ணாமலை அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் 85 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய நிலையில், அனைவரும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தோ்ச்சியை பெற்றுத் தந்தனா்.
மாணவா்கள் சே.பிரதாப் 482 மதிப்பெண்களும், ஏ.ஜான் ஹென்றி 471 மதிப்பெண்களும், மாணவி க.தனஸ்ரீ 470 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மற்றும் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், 100 சதவீதத் தோ்ச்சிக்காக உழைத்த ஆசிரியா், ஆசிரியைகளையும் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் பாராட்டி பரிசு வழங்கினாா்.
விழாவில் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகப் பொருளாளா் ஆா்.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி, உதவித் தலைமை ஆசிரியா் மு.சண்முகம், ஆசிரியா்கள் வ.சதீஷ்குமாா், பா.கலைச்செல்வி, நா.பாலசுப்பிரமணியன், ஆா்.காவேரி, கா.முத்துகணேசன், ரா.செல்வி, கி.ச.ஷைலஜா, ரா.தாமோதரன், சி.யமுனா, உடற்கல்வி ஆசிரியா் நா.சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.