செய்திகள் :

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆய்வகப் பொறுப்பாளர் போக்சோவில் கைது

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராக காட்பாடி கீழ்வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (50) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் ஜூலை 24-ம் தேதி, ஆய்வகத்துக்குச் சென்ற முதலாமாண்டு பயிலும் 17 வயது மாணவியின் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து அந்த மாணவியிடம் பாலியில் சீண்டலிலும் ஈடுபட்டுவந்ததாகவும் தெரிகிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், தனது பெற்றோரிடமும் தெரியப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பிலிருந்தே காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆய்வகப் பொறுப்பாளர் ராஜசேகரனை நேற்றைய தினம் கைது செய்தனர்.

திருடு போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்; CCTV-யால் சிக்கிய எலி; இன்ஸ்டாவைக் கலக்கிய திருட்டு!

கர்நாடகா மாநிலம் துமகுரு என்ற இடத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் விஷ்வாஸ். இவர் முதல் நாள் இரவு கடையை அடைத்து மறுநாள் வந்து கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனித்தபோது கடையிலிருந்த வைரக்கல் பதித்த தங்க ஆப... மேலும் பார்க்க

இளையான்குடியில் போதை பொருள் தயாரிப்பு ஆய்வகம் கண்டுபிடிப்பு - கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது!

ராமநாதபுரம் காவல்துறையின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 27-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டி அருகே திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்த்... மேலும் பார்க்க

உருளைகிழங்கு மூடைகளுடன் கடத்தி வரப்பட்ட கஞ்சா பார்சல்கள் - 3 பேரை கைது செய்த க்யூ பிரிவு போலீஸ்!

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, வலி மாத்திரைகள் மற்றும் மெத்தமைன், ஐஸ் போன்ற போதை மருந்துகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவ... மேலும் பார்க்க

ஈரோடு:‌ 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கிய கடத்தல் கும்பல்; வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

'சந்தனக் காடு' என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன. இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங... மேலும் பார்க்க

சிவகங்கை: 'முன்விரோதம், போதை, கோபம்' - 18 மணி நேரத்தில் 3 கொடூரக் கொலைகள்; அச்சத்தில் மக்கள்

குடும்பத் தகராறு, ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம், போதை மற்றும் எல்லை மீறிய கோபம் என வெவ்வேறு பின்னணிகளில் நடந்த 3 கொடூரக் கொலையால் சிவங்கை மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. "சிறையிலிருந்து வெ... மேலும் பார்க்க

வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் மான்கள்; 'மான் பூங்கா' அமைக்க கோரிக்கை; கைவிரிக்கும் அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள கல்லகம் பகுதியில் கலகம் ஏரி உள்ளது. திருச்சி- அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகில் காப்புக் காடுகள் உள்ளதால், அந்தக்... மேலும் பார்க்க