செய்திகள் :

திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி - விவசாயிகள் கவலை

post image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது.

கோயிலுக்குள் மழை நீர்

திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. தொடர் மழையால் இக்கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் கோயிலில் புகுந்த மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்வதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் பலர் ஜாலியாக கடற்கரையில் கரையில் குளித்தனர்.

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் 1,62,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்திருந்தனர். தொடர் கன மழையில், நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக கடந்த 3 நாட்களாக வயலில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழை நீர் சூழ்ந்த வயலில் விவசாயிகள்

மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரில் நெற்பயிர் மூழ்கியுள்ளன. டெல்டாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கோவில், வ... மேலும் பார்க்க

நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் - கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்... மேலும் பார்க்க

பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை - கர்நாடகா தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா?

கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து வி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பருவம் தவறிய கனமழை; திராட்சை விவசாயம் 70% பாதிப்பு - உயிரை மாய்த்த 9 விவசாயிகள்

நாசிக் - திராட்சை தலைநகர் பாதிப்பு மகாராஷ்டிராவின் நாசிக், புனே, சோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் திராட்சை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிக அளவில் இ... மேலும் பார்க்க

கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண கோஷம் | Photo Album

ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள... மேலும் பார்க்க

``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீரை, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் திறந்து வைத்தார். வத... மேலும் பார்க்க