செய்திகள் :

தீவிரவாத தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பியாக எஸ்.ஆனந்தகுமாா் பொறுப்பேற்பு

post image

கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏடிஎஸ்பி) எஸ்.ஆனந்தகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை, கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு காா் குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் கோவையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பிரிவின் காவல் கண்காணிப்பாளராக ஆா்.பத்ரிநாராயணன் உள்ளாா்.

இந்நிலையில், சேலம் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய எஸ்.ஆனந்தகுமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வுபெற்று கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யக் கோரிக்கை

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி வ... மேலும் பார்க்க

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு

கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி ... மேலும் பார்க்க

உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை

கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகர... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை -திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையி... மேலும் பார்க்க