செய்திகள் :

"தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும்" - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

post image

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் தூய்மைப் பணியாளர்கள் அனுமதி கேட்டிருந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ஆனால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.

சென்னையின் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து அந்த மண்டலங்களில் பணி செய்து வந்த 1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

ரிப்பன் பில்டிங்கின் வெளியே போராட்டத்தைத் தொடங்கியவர்கள், 150 நாட்களைக் கடந்து சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

துறை சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் என யாருமே தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனால்தான் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.

தூய்மைப் பணியாளர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் பொது அமைதிக்குப் பாதிப்பும் ஏற்படும் எனக்கூறி போராட்டத்துக்கான அனுமதியை மறுத்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

"13 நாளா அந்த ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ நாங்க போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா?" எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

`தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல்... மேலும் பார்க்க

AjithKumar: "அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்"- ரசிகர்கள் குறித்து அஜித்குமார்

நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதனிடையே கார் பந்​த​யத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித்குமார். து... மேலும் பார்க்க

`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரண... மேலும் பார்க்க