செய்திகள் :

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

post image

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மார்கழி மாதம் என்பதால், முருகசெல்வி, அப்பகுதியிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு அதிகாலையில் பஜனை குழுவுடன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம்.

சேர்ந்தமரம்

ஆனால், நேற்று காலை அவர் பஜனைக்கு வரவில்லையாம். இந்த நிலையில், வழக்கமாக முருகசெல்வியின் வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், முருகசெல்வியின் வீட்டின் குளியலறை குழாயில் இருந்து ரத்தம் கசிந்து வருவதாகக் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர், சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம், நகைக்காகவா அல்லது வேறு ஏதும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். முருகசெல்வியின் செல்போன் அழைப்புகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முருகசெல்வியின் வீட்டிற்கு தினமும் பால் கொண்டு வரும் சரத் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சேர்ந்தமரம் காவல் நிலையம்

அவரிடம் நடத்திய விசாரணையில், ”எனக்கு கடன் பிரச்னை உள்ளது, தனியாக உள்ள முருகசெல்வியிடம் நகையை பறித்தால் கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதால்,  முருகசெல்வியை நானே கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட முருகசெல்விக்கும், கைது செய்யப்பட்ட பால்காரர் சரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சரத்,  முருகசெல்வியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. சரத்திட,ம் இருந்து 4 சவரன் தங்கநகை, கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக்க ம்பியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.     

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க