செய்திகள் :

`தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ஜீரோவுக்குப் போவார்' - பாமக அருள் பேச்சு

post image

சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இணைச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் உரையாற்றினார். அப்போது அவர், ``எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பாமக கட்சி. அரை நூற்றாண்டு காலம் மக்களுக்காக போராடி போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கிறார். சாதாரண மன உளைச்சல் அல்ல. இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம்? ராமதாஸ் அய்யா இருக்கும் வரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருந்தது. கட்டுப்பாடாக வைத்திருந்த நிலையில் அதை மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சித்து வருகிறது.

பாமக அருள்

அன்புமணிக்குப் பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸ் ஐயாவை படுத்திக்கொண்டிருக்கின்ற பாடு அதிகம். அன்புமணி என்ன சாதனை செய்தீர்கள்..? என்ன தியாகம் செய்து உள்ளீர்கள். சிறையை பார்க்காத உங்களுக்கு பல பதவிகளை வாங்கிக் கொடுத்தவர் ராமதாஸ். இது போன்ற தந்தை கிடைத்திருந்தால் மரியாதையுடன் நான் இருந்திருப்பேன். இது போன்ற தந்தை யாருக்கும் கிடைக்க மாட்டார். ஆனால் அந்த தந்தையை இழந்து விட்டீர்களே..? இந்த தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ஜீரோவுக்குப் போவார். மக்கள் ஒன்றாம் எண்ணில் ராமதாஸ்க்கு பின்னால் இருக்கிறார்கள். மக்கள் அன்புமணியை தூக்கி எறிந்துவிட்டார்கள். அந்த பூஜ்ஜியம் குப்பைத் தொட்டிக்குச் செல்லும். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தலைமையில் பாமக இருக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதலமைச்சராக யார் வருவார் என்று ராமதாஸ் ஐயா முடிவு செய்வார்" என்றார்.

"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" - ஸ்டாலின் பேச்சு

இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது, "கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்கள... மேலும் பார்க்க

``எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா? 'இவர்கள்' பறைசாற்றுவார்கள்" - மகளிர் மாநாட்டில் கனிமொழி

திருப்பூர், காரணப்பேட்டையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது..."இந்த மேடையில் தமிழ்நாடு முதலமை... மேலும் பார்க்க

`பதவி வெறி கண்ணை மறைத்தால்... தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார்!' - அன்புமணியைச் சாடும் சகோதரி மகன்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், மாநில செயற்குழு உறுப்பினருமான சுகந்தன் பேசுகையில், "எனக்கு தமிழி... மேலும் பார்க்க

DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் த... மேலும் பார்க்க

`சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார்..!" - அன்புமணி குறித்து மனம் நொந்த ராமதாஸ்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, "எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்... மேலும் பார்க்க

பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் ச... மேலும் பார்க்க