செய்திகள் :

"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில்..." - மக்கள் நம்பிக்கையை தகர்த்தார்களாக ராஜினாமா எம்எல்‌ஏ-க்கள்?

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்றுவரை இந்திய அளவில் உற்றுநோக்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மாறி வரும் சூழலில், எஸ்.பி‌‌. வேலுமணி அணியில் இடம்பெற்றிருந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறை (அதிமுக) எம்.எல்.ஏ ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி ( அதிமுக) எம்.எல்.ஏ சத்யபாமா உட்பட 3 எம்.எல்.ஏ- க்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

த.வெ.க- வில் இணைந்துள்ள இவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்களாக களம் காண இருக்கிறார்கள் என்கிற தகவல்கள் வெளியாகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

சத்யபாமா

தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் சிலரிடம் பேசினோம், "வேட்பாளர் மீதான நம்பிக்கை மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு மதிப்பளித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்தோம். ஆனால், எங்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாக ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்யின் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறைந்தபட்சம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களிடம் முறையான அறிக்கை கூட வெளியிடவில்லை.

எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில் இப்படி செய்திருக்கிறார்கள். இடைத்தேர்தல் என்கிற பெயரில் என்னனென்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம். இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது" எனக் கொந்தளித்தனர்.

தவெக: "குதிரைபேர அரசியலை காங்கிரஸார் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" - ஜோதிமணி கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர். இதனை அரசியல் தலைவர்கள், "தவெ... மேலும் பார்க்க

அதிமுக: `அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை இசக்கி சுப்பையா' - ராஜினாமா செய்துவிட்டு தவெக தாவுகிறார்?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்பட்ட இசக்கி சுப்பைய... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: ``ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்.!" - பழனிசாமி கண்டனம்

நேற்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தார். அந்த அறிவிப்பு 'விஞ்ஞான ஏமாற்று வேலை' என்று சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? - ட்ரம்ப் 'நேரடி' பதில்!

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கூட, 'தற்காப்பு தாக்குதல்' என்றே கூறப்பட்டுள்ளது. அதனால், ... மேலும் பார்க்க